ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம்

கார்கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் பேரழிவை சந்திக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த … Read more

பதவியை காப்பாற்றும் முயற்சி; புதிய அதிகாரிகளை நியமிக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் இருந்த போது, பிரதமா் இல்லத்தின் விதிமீறல்கள் குறித்த சர்ச்சைகள் வெளியான நிலையில், அரசின் உயா் அதிகாரிகள் 4 போ் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனா். இது, பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அது தொடா்பாக அரசுத் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.  அதில், கொரோனா பரவலை ( Corona Virus) கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை கடை பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வந்த சூழலில், … Read more

பிப். 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு – அரசு திடீர் விளக்கம்!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, … Read more

அலைசறுக்கு போட்டியில் இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளி 49 வயது அமெரிக்க வீரர் முதலிடம் <!– அலைசறுக்கு போட்டியில் இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளி 49… –>

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நடைபெற்ற அலைசறுக்கு போட்டியில் ஏராளமான இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளிய கெல்லி ஸ்லேட்டர் 49 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார். 1992ம் ஆண்டு, 20 வயதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், மிகவும் இளம் வயதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஸ்லேட்டர், அலைசறுக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் வயதான வீரர் என்ற சாதனையும் தன் வசம் வைத்துள்ளார். 5 நாட்களில் 50வது பிறந்த நாளை கொண்டாட உள்ள … Read more

சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் தீவிர ஆலோசனை!

சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த வாரம் பாராளுமன்றம் இது குறித்து விவாதிக்கும் என்றும் அவர் கூறினார். 2020 ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் (Corona Virus) தொடங்கியதில் இருந்து, தனது எல்லைகளை மூடிய ஆஸ்திரேலியா, அதன் குடிமக்கள், புலம்பெயர்ந்தோர், சர்வதேச மாணவர்கள் மற்றும் சில பணியாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில், கடுமையான கட்டுபாடுகளை விதித்திருந்த … Read more

லதா மங்கேஷ்கர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும்: பாக். அமைச்சர் புகழஞ்சலி

இஸ்லாமாபாத்: தலைசிறந்த பாடகர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும் என்று பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. லதா செப்டம்பர் 28, 1929 அன்று பாரம்பரிய பாடகரும் நாடகக் கலைஞருமான பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் மற்றும் ஷெவந்தி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மறைந்த … Read more

மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு <!– மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவ… –>

மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 5 வயதுச் சிறுவனின் சடலத்தை மீட்புக் குழுவினர் மீட்டனர். 25 சென்டி மீட்டர் விட்டமுள்ள கிணற்றில் 104 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் ராயனை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வந்தனர். ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய குழித் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட இடையூறுகளால் மீட்பு பணியில் தொய்வு … Read more

கொரோனா பாதிப்பு- வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்கும் துருக்கி அதிபர்

இஸ்தான்புல்: துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இத்தகவலை எர்டோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். “எனக்கும் என் மனைவிக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் தொடர்ந்து கடமையை செய்கிறோம். நாங்கள் வீட்டில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என எர்டோகன் கூறி உள்ளார். துருக்கியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு … Read more

இஸ்தான்புல் சிறையில் தீ :20 கைதிகள் மயங்கினர்| Dinamalar

இஸ்தான்புல்:துருக்கியின் இஸ்தான்புல் சிறையில் நடந்த தீ விபத்தில் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியின் இஸ்தான்புல் சிறையில், நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது.சிறை பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதற்கிடையே தீயின் புகையால் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிறையில் தீ அணைக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாக, அந்நாட்டு சட்ட அமைச்சர் பெகிர் போஸ்டாக் சமூக … Read more

மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 16 பேர் கொலை <!– மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில… –>

மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 16 பேர் கொலைச் செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்தல்,கொள்ளை மற்றும் கொலை கும்பலுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்நிலையில் Fresnillo பகுதியில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், சாலையில் கிடந்த 10 பேரின் உடல்களை கைப்பற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர். Source link