அமெரிக்கா: சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 5 பேர் பலி; இந்தியர்கள் உள்பட 40 பேர் காயம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்று விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியர்கள் உள்பட 54 பேர் நையாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா கொண்டாட்டங்களை முடித்து விட்டு நியூயார்க் நகருக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. நியூயார்க்கின் பப்பல்லோ நகருக்கு 40 கி.மீ. கிழக்கே பெம்புரோக் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இதனை … Read more

அமெரிக்காவில் வசிக்கும் 5.5 கோடி பேரின் விசாக்கள் மறுபரிசீலனை.. இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படுமா..?

வாஷிங்டன், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை பெற்று அங்கு வசிக்கிறார்கள். இதனிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. எனவே சட்டவிரோதமாக குடியேறிவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட ஏராளமானோர், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். இந்தநிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்தது. … Read more

கைவிலங்குடன் சிறை சென்ற ரணில்.. போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு

கொழும்பு, இலங்கையில் கடந்த 2022 ஜூலை முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). மேலும் 6 முறை இலங்கையின் பிரதமர் பதவியையும் அலங்கரித்து உள்ளார். ரணில் விக்ரமசிங்கே அதிபராக இருந்த காலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி மைத்ரிக்கு இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து … Read more

பாகிஸ்தானில் இம்ரான்கானின் மருமகன் கைது

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 72) மீது ஊழல், பணமோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என கோர்ட்டு உறுதி செய்தது. எனவே ராவல்பிண்டியில் உள்ள கோர்ட்டில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ந்தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் … Read more

காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும்; இஸ்ரேல் ராணுவ மந்திரி எச்சரிக்கை

ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நிலவியது. இதனால் 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 22 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரில் இதுவரை சுமார் 63 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் பலவும் … Read more

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது – பின்னணி என்ன?

கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலை மாதம் பதவி விலகினார். அவரது எஞ்சிய பதவிக் காலத்தில் ரணில் அதிபராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பர் வரை அவர் அதிபராக பதவி வகித்தார். இவர் 5 முறை இலங்கை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், ரணில் அதிபராக இருந்தபோது, … Read more

நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்: ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

டெல் அவிவ்: மேற்​காசிய நாடான இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்க மறுத்​தது. இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் மீண்​டும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான இஸ்​ரேலின் நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்​கா​விட்​டால் குறிப்​பாக அனைத்து பணயக் … Read more

‘மேற்கு ஆசியாவிலேயே முதல்முறை: காசாவில் உணவு பஞ்சம்’ – ஐ.நா பிரகடனம்

புதுடெல்லி: மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ‘காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது’ என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் ஃப்ளட்ச்சர் … Read more

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ரஷியா

கீவ் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது. அதனை பொருட்படுத்தாததால் உக்ரைன் மீது 2022-ல் ரஷியா போர் தொடுத்தது. 3½ ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப … Read more

இந்தியா மீதான 50% வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமல்: ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் உறுதி

வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா ‘லாபம் தேடும் திட்டத்தை’ நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றம் சாட்டினார். மேலும், இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நவரோ, “பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் … Read more