டெஹ்ரானில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற வேண்டும் – எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்

டெஹ்ரான், தங்களுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, ஈரானுக்கு எதிராக கடந்த 13-ந் தேதி இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரான் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டது. அலை அலையாக ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றை ஏவியது. இரு நாடுகளிடையே மோதல் தீவிரம் அடைந்திருப்பதால், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. … Read more

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

அல்​பாட்டா: கனடா​வில் நடை​பெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். பிரதமர் நரேந்​திர மோடி, 3 நாடு​களுக்​கான 5 நாள்​கள் அரசு​முறைப் பயணத்​தின் முதல் கட்​ட​மாக, மத்​தி​ய தரைக் கடல் பகுதியில் அமைந்​துள்ள தீவு நாடான சைப்​ரஸுக்கு கடந்த 15-ம் தேதி சென்​றார். இதைத் தொடர்ந்து அங்​கிருந்து திங்​கள்​கிழமை மாலை புறப்​பட்​டார். இந்​நிலை​யில், நேற்று காலை கனடாவுக்கு பிரதமர் மோடி சென்​றடைந்​தார். கனடா​வின் அல்​பாட்டா நகரிலுள்ள கால்​கரி விமான​ நிலை​யத்​தில் அந்​நாட்டு அரசுத் தரப்​பில் … Read more

இஸ்ரேல் ஈரான் மோதல்: போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்; ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

ஒட்டாவா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த 16 மற்றும் 17-ந் தேதிகளில் (உள்ளூர் நேரப்படி) நடந்தது. கனடா பிரதமர் மார்க் கார்னி … Read more

அமெரிக்காவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக சென்ற ​பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு கடும் எதிர்ப்பு

வாஷிங்​டன்: அமெரிக்காவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு, இம்ரான் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசிம் முனிருக்கு சமீபத்தில் ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் தோல்வியை மறைப்பதற்காக இந்த பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 5 நாள் அரசு முறைப் பயணமாக அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க ராணுவத்தின் 250-வது … Read more

ஈரான் தலைவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் – டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில், “ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டு உடனடியாக வெளியேறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இன்றிரவே வெள்ளை மாளிகை திரும்ப உள்ளார்” … Read more

வாட்ஸ் அப் ஸ்டேடஸில் வருகிறது முக்கிய மாற்றம்: மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்

உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது. அதன்பிறகு பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப் மேற்கொண்டு வருகிறது. முதலில் குறுஞ்செய்தி மட்டும் பகிரும் வசதி இருந்தது. அதன்பிறகு இமேஜ்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதி கொண்டு வரப்பட்டது. அதேபோல, 60 வினாடிகள் … Read more

“இப்போதைக்கு கமேனியை கொல்லப் போவதில்லை” – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

“ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. … Read more

இஸ்ரேல் தொடர் தாக்குதலால் டெஹ்ரானில் அணுக்கதிர் வீச்சு அபாயம்: ஈரானின் புதிய ராணுவ தளபதி உயிரிழப்பு – பின்னணி என்ன?

டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ராணுவத் தளபதி முகமது பகேரி, ஐஆர்ஜிசி படை தளபதி உசைன் சலாமி, ஈரான் போர் கட்டளை தலைமையக தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஈரானின் புதிய தளபதியாக அலி … Read more

இஸ்ரேல் Vs ஈரான் தீவிரம்: போர் நிறுத்தத்தை விட ‘மேலானதை’ நோக்கும் ட்ரம்ப் சொல்வது என்ன?

வாஷிங்டன்: இஸ்ரேல் – ஈரான் மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்ததை எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்த ஒன்றை எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார். அதற்கு, போர் நிறுத்தத்தை விட சிறந்தது … Read more

கேரள பெண்ணுக்கு அடிச்சது ஜாக்பாட் லாட்டரி… அவருக்கே தெரியாமல் வாங்கிய கணவன் – ஹேப்பி சம்பவம்!

Lottery For Kerala Lady: அபுதாபியில் உள்ள கேரள பெண்மணிக்கு திடீரென லட்சக்கணக்கில் லாட்டரி அடித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.