வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீதம் வரி – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்த முடிவை ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளமான டிரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது பதிவில், அமெரிக்காவின் சினிமா தயாரிப்பு தொழில், பிற நாடுகளால் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இது குழந்தையின் கைக்குள் இருக்கும் ‘மிட்டாய்’ திருடுவது போலத்தான் … Read more

பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி

குவாங் டிரை, வியட்நாமில் புவலாய் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டது. கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை புயல் கரையை கடந்தது. அப்போது, 26 அடி உயரத்திற்கு … Read more

சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு: 2 மணி நேர பயணம் 2 நிமிடங்களாக குறைப்பு

பீஜிங், இன்றைய நவீன உலகில் அனைத்துமே எளிதாக இருந்தாலும், உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சவாலான ஒன்று தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் சீனா தான் உலகளவில் முன்னணியில் உள்ளது. ஏனெனில் உலகின் முதல் 100 உயரமான பாலங்களில் பாதிக்கும் மேல் சீனாவில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது குய்ஷோ மாகாணத்தில் புதிய பாலம் ஒன்றைக் கட்டி முடித்துள்ளது சீனா. இதன்மூலம் உலகின் உயரமான பாலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தப் … Read more

அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொடூர கொலை… போதை கும்பல் அட்டூழியம்

அயர்ஸ், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 3 இளம்பெண்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 19-ந்தேதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி (20) மற்றும் லாரா இளம்பெண்களை பியூனஸ் அயர்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான புளோரன்சியோ வரேலாவில் உள்ள வீட்டிற்கு ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்றது. அங்கு அவர்கள் மூவரும் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். … Read more

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்

நியூயார்க்: அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் தெரிவித்துள்ளார். “ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாய்களை திருடுவது போல அமெரிக்க தேசத்தின் திரைப்பட தயாரிப்புத் தொழிலினை மற்ற நாடுகள் களவாடியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கலிபோர்னியா தான். ஏனெனில், அங்கு பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநர் ஆட்சி பொறுப்பில் உள்ளார். இந்த நீண்டகால பிரச்சினைக்கு … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா

காசா: இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்​குள் புகுந்து தீவிர​வாத தாக்​குதல் நடத்​தினர். இந்த தாக்​குதலில் 1,139 இஸ்​ரேலியர்​கள் கொல்​லப்​பட்​டனர். மேலும், இஸ்​ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதி​களாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்​திச் சென்​றது. இதையடுத்​து, ஹமாஸ் ஆயுதக்​குழு மீது போர் அறி​வித்த இஸ்​ரேல், காசா முனை​யில் … Read more

துருப்பிடித்து வரும் நிலவு; எல்லாவற்றிற்கும் காரணம்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

பீஜிங், சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியது. அதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நிலவின் மேற்பரப்பில், அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு … Read more

புவலாய் புயல் தாக்கி பிலிப்பைன்சில் 20 பேர் பலி; வியட்நாமுக்கு நகர்ந்தது

குவாங் டிரை, பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றன. 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புயலால், மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்நிலையில், வியட்நாம் நோக்கி புயல் நகர்ந்து … Read more

பாம்புகள் நிறைந்த கிணற்றில் தவறி விழுந்து 54 மணிநேரம் போராடிய பெண்ணின் பகீர் அனுபவம்

பீஜிங், சீனாவின் புஜியான் மாகாணத்தில் குவாங்சவ் நகரில் 48 வயது பெண் ஒருவர் காட்டு பகுதி வழியே நடந்து சென்றார். அப்போது, அடர்ந்த வன பகுதியில் இருந்த பெரிய கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியும். அதனால், நீந்தி கிணற்றின் சுவர் ஒன்றை பிடித்து கொண்டார். ஆனால், அவரால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. 54 மணிநேரம் போராட்டத்திற்கு பின்னர் அவரை அவசரகால மீட்பு குழுவினர் கண்டறிந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். … Read more

காசாவில் 140 பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் பாதுகாப்பு படை

டெல் அவிவ், காசா மீது ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் விமான படை இணைந்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன. பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு … Read more