அமெரிக்காவில் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

வாஷிங்டன் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனை தொடர்ந்து நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்து உத்தரவிட்டார்.அதன்படி விசாக்காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சட்ட விரோதமாக குடியேறியவர்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேரை கைது செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே கடந்த 7-ந் தேதி … Read more

ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு

தெஹ்ரான், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது. இதையடுத்து இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது. … Read more

இந்தியா – பாக். போல விரைவில் இஸ்ரேல் – ஈரான் இடையே அமைதி ஏற்படும்: ட்ரம்ப் உறுதி 

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையே என்னுடைய தலையீட்டால் அமைதி ஏற்பட்டதைப் போல விரைவில் இஸ்ரேல் – ஈரான் இடையே அமைதி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே, அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, விரைவாக ஒரு நல்ல முடிவை எடுத்து, போரை நிறுத்த முடிந்த இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு … Read more

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம்: மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்; தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள் 

டெல் அவிவ்: இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. எண்​ணெய் வயல்​கள் நாச​மாகின. இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்​ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர். அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் தேதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் … Read more

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசம் செயல்படுவது எப்படி? 

இஸ்ரேல் நாட்டின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசத்தின் சிறப்புகள், வசதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அந்த பாதுகாப்பு கவசத்தையும் மீறி இஸ்ரேலை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதும் கவனிக்கத்தக்கது. ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் காலை ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 பேர் படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார். ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் … Read more

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

தெஹ்ரான்: போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான உதவி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் தூதரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தூதரகத்திலிருந்து நிலைமை குறித்த அண்மையத் தகவல்களைப் பெற ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த டெலிகிராம் இணைப்பு தற்போது ஈரானில் உள்ள … Read more

‘அமெரிக்காவின் முழு பலத்தையும் உங்கள் மீது இறக்குவோம்’ – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

நியூயார்க்: “ஈரான் எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் நம்மைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் அவர்கள் மீது இறங்கும்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, இஸ்ரேலின் ராணுவம் தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தைத் தாக்கியதாக அறிவித்தது. மேலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெஹ்ரானை சுற்றியுள்ள பல இடங்களைத் தாக்கியதாகவும் அது கூறியது. இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி … Read more

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா: பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? – வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் இது அரசியில் ரீதியாக பேசு பொருளானது. “இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவு,” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார். “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு … Read more

வலுக்கும் மோதல்: ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் … Read more

ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல்… இஸ்ரேல் எடுத்த முக்கிய முடிவு! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!

Israel Iran Conflict: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் அணு ஆயுத இலக்குகளை நோக்கி இஸ்ரேல் இன்றும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.