உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ நிதியுதவி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பிரசல்ஸ், ரஷியா உடனான போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலதன சந்தையில் இருந்து 90 பில்லியன் யூரோ நிதி திரட்டி, அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லெயன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரஷியா போர் இழப்பீடுகளை தரும் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

துபாய், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஐக்கிய அரசு அமீரகம். இந்நாட்டின் துபாய், அபுதாபியில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக துபாய், அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று காலை வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதேபோல், கனமழையால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். 1 More update தினத்தந்தி Related Tags : United Arab Emirates  … Read more

சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் பலி

கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு … Read more

வங்காளதேசம்: இந்து மத இளைஞர் அடித்துக்கொலை – உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பல்

டாக்கா, வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையாக செயல்பட்ட மாணவர் அமைப்பின் தலைவராக செயல்பட்டவர் ஷெரீப் ஒசாமா பெடி. இவர் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனிடையே, தலைநகர் டாக்காவில் உள்ள சாலையில் ரிக்‌ஷாவில் சென்ற ஒசாமா பெடி மீது பைக்கில் வந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒசாமா சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். … Read more

இந்து மத இளைஞரை… அடித்தே கொன்ற கும்பல்… வங்கதேசத்தில் நடப்பது என்ன?

Bangladesh Violence: இறை தூதரை அவமதித்ததாக கூறி இந்து இளைஞரை வங்கதேசத்தில் ஒரு கும்பல் பொதுவெளியில் அடித்து கொன்று, உடலை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் ஊக்கத்தொகை-அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஆயுதப் படைகளின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ‘போர்வீரர் ஈவுத்தொகை’ என்ற சிறப்புப் பணப் பரிசை அறிவிக்கிறேன். 1776-ம் ஆண்டில் நமது தேசம் நிறுவப்பட்டதைக் கவுரவிக்கும் விதமாக இந்த ஈவுத்தொகை வழங்கப்படும். 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தலா 1,776 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும். இது அவர்களின் சேவை மற்றும் தியாகத்திற்கு ஒரு அங்கீகாரமாக இருக்கும். அந்த காசோலைகள் … Read more

இந்தியா-ஓமன் இடையேயான நட்பு புதிய உயரங்களை தொடும்- பிரதமர் மோடி பேச்சு

மஸ்கட், பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கான பயணத்தை கடந்த 15-ந்தேதி தொடங்கினார். முதலில் ஜோர்டானுக்கு சென்று இருதரப்பு பேச்சுவார்த்தை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் எத்தியோப்பியாவுக்கு சென்றார். எத்தியோப்பிய பயணத்தை முடித்து, பிரதமர் மோடி இறுதிக்கட்டமாக நேற்று மாலை ஓமனுக்கு சென்றடைந்தார். ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை ஓமனின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையத் … Read more

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக … Read more

87 வயதான பிரபல ஓவியர்… 37 வயது மனைவி பேச்சை கேட்டு செய்த செயல்… பிள்ளைகள் அதிர்ச்சி!

World News: 87 வயதான பிரபல ஓவியருக்கும், அவரது 37 வயதான மனைவிக்கும் மகன் பிறந்ததை தொடர்ந்து, அந்த ஓவியர் தனது முந்தைய பிள்ளைகளுடனான உறவை முற்றிலுமாக துண்டிப்பதாக அறிவித்துள்ளார். 

செல்போனில் மட்டுமில்லை..இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ்.. மெட்டா கொடுத்த அப்டேட்

இன்ஸ்டகிராம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. இந்தியாவில் மட்டும் இன்ஸ்டகிராம் செயலியை சுமார் 48 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டகிராம் செயலியில் துவக்கத்தில் புகைப்படம் மட்டுமே அப்டேட் செய்ய முடியும் என்ற நிலை இருந்த நிலையில், குறுகிய வீடியோக்களை அப்லோடு செய்து வசதியும் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இப்போதைய 2 கே கிட்ஸ்கல் குனிந்த தலை … Read more