‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ ஆவணத்தில் தனது பெயர் – எலான் மஸ்க் சொல்வது என்ன?

நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற பாலியல் குற்றச்சாட்டு ஆவணத்தில் தனது பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். புதிதாக வெளியான 6 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில், எலான் மஸ்க் கடந்த 2016 டிசம்பர் 6-ம் தேதி வர்ஜீனியா தீவுகளில் உள்ள எப்ஸ்டைன் தீவுக்கு சென்றாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பகிர்வில், “இது தவறானது” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்த விளக்கங்களையும் சொல்லாமல் … Read more

ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் – இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 4 நாடுகளின் அமைச்சர்கள் ஆலோசனை

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் வழங்க வலியுத்தி வரும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. நியூயார்க்கில் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் இடையே ஜி-4 எனப்படும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஐ.நா-வின் பாதுகாப்பு அவையை சீர்திருத்துவது உட்பட ஐநா அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து … Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​திக்க 30 நிமிடம் காத்​திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்

வாஷிங்​டன்: பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர். இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம் மாலை 4.52 மணிக்கு சென்​றனர். அப்​போது அதிபர் ட்ரம்ப் பல்​வேறு அலு​வல்​களில் ஈடு​பட்​டிருந்​தார். அவரை சந்​திப்​ப​தற்​காக ஷெபாஸ் ஷெரீப்​பும், அசிம் முனிரும் சுமார் 30 நிமிடத்​துக்கு மேல் காத்​திருந்​தனர். அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்​சிகளை முடித்​துக் கொண்டு வந்​தார். பின்​னர் பிரதமர் ஷெபாஸ், ராணுவ தளபதி அசிம் ஆகியோரை தனது … Read more

‘பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம்’ – நெதன்யாகு ஆவேசம்

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என … Read more

நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு

காட்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமராக பதவி ஏற்றதும், … Read more

பிரேசில் சிறையில் அழகிப்போட்டி; அலங்கார ஆடைகளில் அணிவகுத்த பெண் கைதிகள்

ரியோ டி ஜெனிரோ, பிரேசில் நாட்டில் உள்ள சில பெண்கள் சிறைகளில், கைதிகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், சமூக உணர்வை ஊக்குவிக்கவும், வருடாந்திர அழகிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டியின்போது பெண் சிறைக் கைதிகள் தங்கள் வழக்கமான சிறை ஆடைகளை விடுத்து, அலங்கார ஆடைகளை அணிகின்றனர். அதோடு சிகை அலங்காரம், ஒப்பனைகள் செய்து மாடல் அழகிகளைப் போல் மேடைகள் அணிவகுத்து ஒய்யாரமாக நடைபோடுகின்றனர். அதே சமயம், இந்த இந்த அழகிப் போட்டி மூலம் சிறைக் கைதிகள் தங்கள் குடும்பத்தினரை … Read more

ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்!

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர். ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.26) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று உரையாற்றினார். தனது உரையில் அவர், “பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது. அந்த அங்கீகாரம், இஸ்ரேலியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு … Read more

டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை – நிபுணர்கள் கருத்து

வாஷிங்டன், உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை ஒரு கவுரவமாக கருதுகின்றனர். இதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதுவும் இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த விருதை பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார். தான் 2-வது முறையாக பதவி ஏற்றபிறகு இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்ளிட்ட 7 போரை நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெளிப்படையாக … Read more

“பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது” – ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

நியூயார்க்: ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ், ஹவுதி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் இயக்கத்தை தங்கள் தேசம் நசுக்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். அவர் தனது உரையில், “கடந்த ஆண்டு இங்கு பேசியபோது இந்த வரைபடத்தை நான் காண்பித்து இருந்தேன். இந்த வரைபடத்தில் ஈரானின் தீவிரவாத செயல்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உலகத்துக்கே அச்சுறுத்தலாக … Read more

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்; டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. அதேவேளை, மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனிடையே, மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக பல்வேறு நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனாலும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இந்நிலையில், மேற்கு கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் … Read more