இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை: பாகிஸ்தானுக்கு 2 மாதங்களில் ரூ.1,240 கோடி இழப்பு

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது அந்நாட்டு அரசு. இந்திய அரசும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இதனால் பாகிஸ்தானுக்கு சுமார் 1,240 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் ரூபாய் … Read more

ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து; ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

பெரூட், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு போர் மூண்டது. இந்த போரில் ஹிஸ்புல்லா பெரும் இழப்பை சந்தித்தது. அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேலுடனான போரை நிறுத்த ஹிஸ்புல்லா ஒப்புக்கொண்டது. இதையடுத்து ஹில்புல்லா ஆயுதக்குழுவினர் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க லெபனான் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேலுடனான மோதலின்போது எல்லையில் ஹிஸ்புல்லா பயன்படுத்திய ஆயுதக்கிடங்குகளும் லெபனான் ராணுவம் வசம் சென்றுள்ளது. அந்த ஆயுதக்கிடங்குகளில் உள்ள ஆயுதங்களை … Read more

இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி. எதிர்ப்பு

வாஷிங்டன்: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வரி மோதல் சூடு பிடித்துள்ளது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு துரதிருஷ்டவசமானது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்தற்காக அமெரிக்காவில் எதிர்க்கட்சியாக செயல்படும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கிரெகோரி மீக்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்த வரி​வி​திப்பு இந்​தி​யா​வும், … Read more

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆக.15-ம் தேதி சந்திப்பு

நியூயார்க்: அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் வரும் 15-ம் தேதி சந்திக்க உள்ளனர். அப்போது ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு கொண்டு வருவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் எச்சரிக்கையையும் மீறி, நேட்டோவுடன் இணைந்து செயல்பட்டதால், உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கினார் புதின். அமைதியை ஏற்படுத்த பல நாட்டு தலைவர்கள் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததால், போர் … Read more

உலகிலேயே இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில்.. மிகப் பயங்கரம் எது தெரியுமா?

Most powerful earthquake: உலகிலேயே இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகப் பயங்கரமான நிலநடுக்கம் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

டிரம்ப்-புதின் சந்திப்பு எங்கே? எப்போது?; விவரம் வெளியீடு

வாஷிங்டன், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டது. உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா தீவிர போர் தொடுத்தது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. போரானது 3 ஆண்டுகளை … Read more

இந்தியா மீதான வரி விதிப்பு அமெரிக்காவை பாதித்துள்ளது: ட்ரம்ப்பின் நண்பர் கருத்து

வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரி அமெரிக்காவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும் அதிபர் ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பருமான ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இந்தியா அதிக வரி விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப் போவதாகக் கூறி வந்தார். இந்நிலையில், இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்த ட்ரம்ப், அமெரிக்காவின் … Read more

குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாத ஜப்பான் மக்கள்: வேகமாக சரியும் மக்கள் தொகை

டோக்கியோ, ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே குழந்தை பிறப்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. எனினும் இளைய தலைமுறையினர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் 2 மடங்கு உயர்ந்தது. கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை சரிவாக இது கருதப்படுகிறது. எனவே மக்கள் தொகை சரிவால் ஏற்படும் நெருக்கடியை ‘அமைதியான அவசர நிலை’ என … Read more

நிலவை முதன்முதலில் சுற்றி வந்து வரலாறு படைத்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

நியூயார்க், நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான, ஸ்மிலின் ஜிம் லவெல் (வயது 97) காலமானார். நாசா விண்வெளி மையத்தின் மூத்த விண்வெளி வீரரான அவர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியில் வீட்டில் இருந்தபோது காலமானார். இதனை நாசா நிர்வாகி மற்றும் போக்குவரத்து செயலாளரான சீன் டப்பி உறுதி செய்துள்ளார். 1968-ம் ஆண்டு விண்வெளி பயணம் மேற்கொண்ட அப்பல்லோ 8 விண்கல பயணத்தில், ஜிம் தலைமையில் நாசா வீரர்கள் பிராங்க் போர்மன் … Read more

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா பொதுச்செயலாளர் கவலை

டெல் அவிவ்: காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. … Read more