பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கனிஸ்தான் எல்லை அருகே, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஓராக்காய் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். 39 வயது லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப் தலைமையில் சென்ற ராணுவத்தினர், தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் … Read more

பாகிஸ்தானில் தண்டவாளம் அருகே குண்டுவெடிப்பு – எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டதால் பரபரப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூர் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். சுல்தான் கோட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த ரெயில் தடம் புரண்டு 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் ரெயில் பெட்டிக்குள் … Read more

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் சொன்ன டிரம்ப்

வாஷிங்டன், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை பலமுறை கூறினார். இந்த நிலையில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது, வரி விதிப்புகளில் உங்களது நிலைப்பாட்டை மாற்றுவீர்களா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டிரம்ப் பதிலளித்து கூறியதாவது:-எனக்கு வரி விதிப்பு அதிகாரம் இல்லையென்றால் 7 போர்களில் குறைந்தது 4 போர்களாவது வெடித்திருக்கும். போர்களை நிறுத்த … Read more

இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி

நியூயார்க், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதம் நடந்தது. இதில் பாகிஸ்தானின் பிரதிநிதி சைமா சலீம் பேசும் போது, காஷ்மீர் பெண்கள் பல தசாப்தங்களாக பாலியல் வன்முறையை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ஏமாற்றும் கதைகளை கேட்கும் நிலைக்கு நாங்கள் … Read more

பாராசூட் இன்றி விமானத்தில் இருந்து கீழே குதித்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் டென்னசி மாகாணம் நாஷ்வில் நகரை சேர்ந்தவர் ஜெஸ்டின் புல்லர் (வயது 35). இவர் விமானத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஜெஸ்டின் 46 வயதான நபருக்கு ஸ்கை டைவிங் பயிற்சி கொடுத்துள்ளார். விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் அந்த நபர் கீழே குதித்த நிலையில், ஜெஸ்டின் பாராசூட் இன்றி குதித்துள்ளார். இதில், மின்னல் வேகத்தில் தரையில் விழுந்த ஜெஸ்டின் சம்பவ இடத்திலேயே … Read more

இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – பாக்.,பயங்கரவாதி எச்சரிக்கை

இஸ்லாமாபாத், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்பட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட … Read more

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று வெளி​யிட்​டது. அமெரிக்​காவை சேர்ந்த ஜான் எம். மார்​டினிஸ், பிரிட்​டனை … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார் ட்ரம்ப்

கெய்ரோ: இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு: முழு விவரம்!

புதுடெல்லி: 2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “மின்சார சர்க்யூட்களில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக” அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று (அக்டோபர் 7) ஸ்டாக்ஹோமில் … Read more

‘நான் சொன்னதால் நிறுத்தினார்கள்’: இந்தியா – பாக். மோதல் குறித்து மீண்டும் பேசிய ட்ரம்ப்

நியூயார்க்: கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவுக்கு வரி விதிப்பு முக்கியமான வருவாயாக அமைந்துள்ளது. அதோடு அதன் மூலம் சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட எங்களால் முடிகிறது. வரி விதிப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி போர்களை நான் நிறுத்தி உள்ளேன். அணு ஆயுத பலம் கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டன. இதில் ஏழு விமானங்கள் … Read more