உக்ரைன் போரில் உங்கள் திட்டமென்ன? – புதினிடம் மோடி வினவியதாக நேட்டோ தலைவர் தகவல்

நியூயார்க்: “அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று ரஷ்ய அதிபர் புதினிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி,வினவியுள்ளார்.” என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி … Read more

தேர்தல் பிரச்சாரத்துக்கு லிபியாவிடம் பணம் பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை

பாரீஸ்: பி​ரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடை​பெற்ற அதிபர் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக, லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் கடாஃபி​யிடம் சட்​ட​விரோத​மாக பணம் பெற்ற வழக்​கில், முன்​னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்​கோசிக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. பிரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்​தலில் நிக்​கோலஸ் சர்​கோசி வெற்றி பெற்று அதிப​ரா​னார். அப்​போது தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் மாமர் கடாஃபி​யிடம் இருந்து சட்​ட​விரோத​மாக நிதி பெற்​ற​தாக​வும், இதற்கு பிர​திபல​னாக, தனித்​து​விடப்​பட்ட லிபி​யா​வுக்கு சர்​வ​தேச … Read more

மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதித்த ட்ரம்ப்: பகிரங்க அறிவிப்பின் பின்னணி என்ன?

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு இந்திய மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. “வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் … Read more

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

பாரீஸ், கடந்த 2007 முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி. லிபியா முன்னாள் அதிபர் மம்மர் கடாபி. கடாபிக்கு ஆதரவாக பேச பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கோலஸ் சர்கோஸி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக , சர்கோஸியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபி நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த பாரிஸ் கோர்ட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை … Read more

டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல்

வாஷிங்டன், இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியாவுக்கு எதிராக இந்த வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்தார். இதனால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரஷியா-சீனாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்ததால், அமெரிக்கா பணிந்தது. இந்தியா மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வந்த டிரம்ப், தனது முடிவை மாற்றிக்கொண்டார். “மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்” என்று கூறினார். மேலும் … Read more

மின்சாரத்துறையில் கடன்; வங்கிகளின் கூட்டமைப்புடன் ரூ.1.2 லட்சம் கோடிக்கு பாகிஸ்தான் ஒப்பந்தம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியால் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் மின்சாரத்துறையில் அதிகரித்து வரும் கடன் சுமையை நிவர்த்தி செய்வதற்காக, 18 வங்கிகளின் கூட்டமைப்புடன் ரூ.1.2 லட்சம் கோடி நிதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது அதிகரித்து வரும் கடன் நெருக்கடியைச் சமாளிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கடன் சுமார் ரூ.2.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதம் … Read more

இலங்கையில் கேபிள் கார் விபத்து: புத்த மத துறவிகள் 7 பேர் உயிரிழப்பு

கொழும்பு, இலங்கையின் வடமேற்கு பகுதியில் நிகவெரட்டிய என்ற இடம் உள்ளது. தலைநகர் கொழும்பிலிருந்து 125 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் புகழ்பெற்ற புத்த மடாலயம் ஒன்று உள்ளது. இந்த மடாலயத்தில் புத்த துறவிகள் பலரும் தங்கி உள்ளனர். தியானங்களுக்கு பெயர் பெற்ற இந்த மடாலயத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் வந்து செல்வார்கள்.இந்த புத்த மடாலயத்தில் கேபிள் கார் சேவையும் உள்ளது. இந்த கேபிள் காரில் புத்த துறவிகள் பயணித்த நிலையில், அது அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. … Read more

பிரேசில்: டொயோட்டா கார் தொழிற்சாலையை சூறையாடிய புயல்; உற்பத்தி பாதிப்பு

சாவோ பாவ்லோ, பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ மாகாணத்தின் சொரோகாபா நகரில் ஜப்பான் நாட்டின் டொயோட்டா ரக கார் உற்பத்தி ஆலை உள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமையும், நேற்றும் புயல் பாதிப்புகளால் கனமழை பெய்து, பலத்த காற்றும் வீசியது. இதனால், ஆலையை புயல் சூறையாடி விட்டு சென்றது. இதன் தொடர்ச்சியாக கார் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் போர்ட்டோ பெலிஜ் என்ற ஆலை உள்பட 2 ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆலையின் கிடங்கு … Read more

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை

பாரிஸ்: லிபிய முன்னாள் அதிபர் கடாபிக்கு ஆதரவாக செயல்பட தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து கொண்ட வழக்கில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 2007 முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி. 1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்தவர் மம்மர் கடாபி. கடாபி கொல்லப்பட்டதை அடுத்தே அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடாபிக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் … Read more

வங்கதேச மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை: முகமது யூனுஸ்

நியூயார்க்: வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை என்றும், இந்தியாவுடன் தங்கள் நாட்டுக்கு பிரச்சினை உள்ளது என்றும் அந்நாட்டை வழிநடத்தி வரும் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற முகமது யூனுஸ் பின்னர் பேசும்போது, “இந்தியாவுடன் வங்கதேசத்துக்கு பிரச்சினைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், வங்கதேசத்தில் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர்களின் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை. … Read more