200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூர்: காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், ‘சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த … Read more

சவுதி அரேபியாவில் 8 பேருக்கு மரண தண்டனை: ஒரே ஆண்டில் இதுவரை 230 பேருக்கு நிறைவேற்றம்

ரியாத், வளைகுடா நாடுகளில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது இந்நிலையில் சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகன் ஒருவருக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக … Read more

ஒஹியோ சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளி மதுரா ஸ்ரீதரன் நியமனம்

கொலம்பஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்டர்னி ஜெனரல் டேவ் யோஸ்ட் நேற்று அறிவித்தார். ஒஹியோ மாகாணத்தின் முக்கிய வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகளை மதுரா கவனிப்பார். இந்நிலையில், ‘‘அமெரிக்​கர் அல்​லாத ஒரு​வரை சொலிசிட்​டர் ஜெனரலாக நியமித்​தது ஏன்​?’’ என்று சமூக வலை​தளங்​களில் பலர் கேள்வி எழுப்பி உள்​ளனர். இதற்கு … Read more

ரஷிய ராணுவ தளங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியா வில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் எரிவாயு குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ரஷியாவின் தென் மேற்கு நகரமான பிரி மோர்ஸ்கோ-அக்தார்ஸ் கில் உள்ள ஒரு ராணுவ விமான நிலை யத்தை தாக்கியதாக உக் ரைன் தெரிவித்து உள்ளது. இங்கு உக்ரைனை தாக்க டிரோன்கள் சேமித்து வைக் கப்பட்டி ருந்தது. டி ரோன் தாக்குதலில் அந்த பகுதி … Read more

அமெரிக்காவில் மாயமானதாக தேடப்பட்டு வந்த இந்தியர்கள் 4 பேரும் சடலமாக மீட்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியாவிற்குச் சென்ற இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மாயமாகினர். உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. கடைசியாக ஜூலை 29-ஆம் தேதி அன்று, பென்சில்வேனியாவில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளனர்.காணாமல் போனவர்கள் டாக்டர் கிஷோர் திவான், 89, ஆஷா திவான், 85, ஷைலேஷ் திவான், 86, மற்றும் கீதா திவான், 84 என்பது விசாரணையில் தெரியவந்தது. அனைவருமே முதியவர்கள் என்பதால், அவர்களின் நிலை குறித்த கவலை … Read more

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா, பஞ்சாபில் நிலநடுக்கம் – மக்கள் பீதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவாகி உள்ளது. தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 2:04 மணிக்கு 102 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. கைபர் பக்துன்க்வாவின் பெஷாவர், ஸ்வாட், மலாகண்ட், நவ்ஷேரா, சர்சத்தா, கரக், திர், மர்தான், முகமது, ஷாங்க்லா, ஹங்கு, ஸ்வாபி, ஹரிபூர் மற்றும் அபோட்டாபாத் … Read more

ட்ரம்ப் அதிபரான பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்

பெங்களுரு: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 – டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை … Read more

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மாஸ்கோ, ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 51.61 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. … Read more

இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, அதே அளவுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். கடந்த ஏப்ரல் 2-ந் தேதி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரிவிதிப்பை அறிவித்தார். பின்னர், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும் வகையில், வரிவிதிப்பை 90 நாட்கள் ஒத்திவைத்தார். கடந்த ஜூலை 9-ந் தேதி அமலுக்கு வருவதாக இருந்த வரிவிதிப்பு, ஆகஸ்டு 1-ந் தேதிக்கு … Read more

உலக பணக்காரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்

வாஷிங்டன், அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளன. இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. இதில் எலான் மஸ்க் 401 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம் கோடி) முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் லாரி எலிசனும், 3-வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்கும் உள்ளனர். ஜெப் பெசோஸ், லாரி பேஜ், ஜென்சன் ஹுவாங், செர்ஜி பிரின், ஸ்டீவ் பால்மர், … Read more