ட்ரம்ப் அதிபரான பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்

பெங்களுரு: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 – டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை … Read more

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மாஸ்கோ, ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 51.61 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. … Read more

இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, அதே அளவுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். கடந்த ஏப்ரல் 2-ந் தேதி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரிவிதிப்பை அறிவித்தார். பின்னர், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும் வகையில், வரிவிதிப்பை 90 நாட்கள் ஒத்திவைத்தார். கடந்த ஜூலை 9-ந் தேதி அமலுக்கு வருவதாக இருந்த வரிவிதிப்பு, ஆகஸ்டு 1-ந் தேதிக்கு … Read more

உலக பணக்காரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்

வாஷிங்டன், அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளன. இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. இதில் எலான் மஸ்க் 401 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம் கோடி) முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் லாரி எலிசனும், 3-வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்கும் உள்ளனர். ஜெப் பெசோஸ், லாரி பேஜ், ஜென்சன் ஹுவாங், செர்ஜி பிரின், ஸ்டீவ் பால்மர், … Read more

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த தாமிர சுரங்கம் – ஒருவர் பலி, 5 பேரை தேடும் பணி தீவிரம்

சாண்டியாகோ, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அன்டஸ் மலைத்தொடரில் எல் டெனிண்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான தாமிர சுரங்கம் உள்ளது. உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்களில் இதுவும் ஒன்றாகும். இதனிடையே, தாமிர சுரங்கத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் தொழிலாளர்கள் 15 பேர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் தாமிர சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில், சுரங்கத்தில் … Read more

ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய டிரம்ப் – காரணம் என்ன?

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியானது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளார். இதனிடையே, 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வரும் உக்ரைன் – ரஷியா போரை நிறுத்த டிரம்ப் முயற்சித்தார். ஆனால், முயற்சி தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த டிரம்ப், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளார். மேலும், 50 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ரஷியா … Read more

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காது என கேள்விப்பட்டேன்; அது நல்லது: ட்ரம்ப்

வாஷிங்டன்: “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருட்களை வாங்காது என்று கேள்விப்பட்டேன். அது ஒரு நல்ல நடவடிக்கை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா எரிபொருள் வாங்காது என்று புரிந்து கொள்கிறேன். அதைத்தான் கேள்விப்பட்டேன். சரியா தவறா என எனக்குத் தெரியாது, ஆனால் அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.” என தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் … Read more

68 நாடுகள் மீதான புதிய வரிகள் 7-ந் தேதி முதல் அமல் – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, அதே அளவுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். கடந்த ஏப்ரல் 2-ந் தேதி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரிவிதிப்பை அறிவித்தார். பின்னர், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும் வகையில், வரிவிதிப்பை 90 நாட்கள் ஒத்திவைத்தார். கடந்த ஜூலை 9-ந் தேதி அமலுக்கு வருவதாக இருந்த வரிவிதிப்பு, ஆகஸ்டு 1-ந் தேதிக்கு … Read more

குரேஷியா ராணுவ படைகளின் 30-வது வெற்றி தின அணிவகுப்பு – ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

சாக்ரெப், கடந்த 1995-ம் ஆண்டு குரேஷிய படையினர், செர்பிய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ஸ்டார்ம்'(Operation Storm) என்ற அதிரடி ராணுவ தாக்குதலை மேற்கொண்டனர். குரேஷிய சுதந்திரப் போரின் முக்கிய ராணுவ நடவடிக்கையாக ‘ஆபரேஷன் ஸ்டார்ம்’ கருதப்பட்டது. இந்த தாக்குதலின் மூலம் செர்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை குரேஷிய ராணுவம் மீட்டெடுத்தது. குரேஷியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக விளங்கும் ‘ஆபரேஷன் ஸ்டார்ம்’ ராணுவ வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் … Read more

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 16 பேர் பலி

காசா, ரஷியா – உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷிய படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு நேரம் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததால் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிர் இழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் … Read more