“இந்தியா – பாக். பதற்றத்தைத் தணித்தவர் ட்ரம்ப்” – ஷெபாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ புகழாரம்

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணித்ததில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பங்கு குறிப்பிடத்தக்கது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் உதவ வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷெரீப், “பஹல்காம் சம்பவம் ஒரு தவறான நடவடிக்கை என்பதை … Read more

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், பாகிஸ்தானிடம் ட்ரம்ப் பேசி இருக்கலாம் என்றும், தான் பாகிஸ்தானியோ, அமெரிக்கரோ இல்லை என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் … Read more

‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

வாஷிங்டன்: பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சிக்கல்களை தணிப்பதில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டினார். மேலும், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமான பங்கை … Read more

ஆப்கன், மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ட்ரம்ப் தடை

நியூயார்க்: தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் … Read more

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை, ரயில் பாதைகள் தகர்ப்பு: உக்ரைன் ராணுவம் தகவல்

கீவ்: கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதையை தகர்த்து விட்டோம் என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ என்ற ரகசிய குறியீடுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக் கூடிய 41 அதிநவீன போர் விமானங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்நிலையில், … Read more

கனடாவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 5 பேர் காயம்

டொரண்டோ, கனடாவின் டொரண்டோ நகரில் லாரன்ஸ் ஹைட்ஸ் பகுதியில் ஜக்காரி கோர்ட்டு மற்றும் பிளெமிங்டன் சாலையருகே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், ஒருவர் பலியானார். ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் என 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், துப்பாக்கி குண்டு காயங்களால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். … Read more

பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலை திருட்டு

பாரீஸ், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷியாவுடன் பிரான்ஸ் பொருளாதார உறவைக் கண்டித்து கிரீன்பீல் என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், ரஷியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக துண்டிக்காத பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிச் சென்றதாக கூறப்பட்டது. இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும். இது குறித்து … Read more

திருமணம் கடந்த உறவு; இந்தோனேசியாவில் காதல் ஜோடிக்கு பொதுவெளியில் 100 சவுக்கடி தண்டனை

ஜகார்ட்டா, இந்தோனேசியாவில் கடந்த 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, திருமணம் கடந்த உறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டது. குறிப்பாக இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி திருமணமாகாத ஜோடி பாலியல் உறவு கொள்வது சட்டவிரோதமாகும். இந்த நிலையில், திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக பண்டா ஆசே நகரில் ஒரு காதல் ஜோடிக்கு பொதுவெளியில் 100 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர சூதாட்டம், மது அருந்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக மேலும் 3 பேருக்கு மொத்தம் … Read more

காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; 55 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

பீஜிங், சீனாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 4.43 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 81.99 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 1 More update தினத்தந்தி … Read more