உடற்பயிற்சி மூலம் பிரபலமான ராணுவ வீராங்கனை தற்கொலை – மகள் பிறந்தநாளை கொண்டாடிய சிலநாட்களில் விபரீத முடிவு

வாஷிங்டன், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனை மிச்சேல் யங்க் (வயது 34). இவர், தான் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு பிரபலமடைந்தார். மிச்சேலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவருக்கு கிரேசி (வயது 12) என்ற மகள் உள்ளார். கிரேசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தனது மகள் கிரேசி பிறந்தநாள் தொடர்பாக மிச்சேல் யங்க் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், … Read more

பாப் பாடலை கேட்டு ரசித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் தண்டனை விதித்த வடகொரிய அரசு

பியாங்யாங், தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த குற்றத்துக்காக தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் தென் கொரிய பாப் இசை, சினிமாவைக் கண்டு ரசித்ததற்காக தண்டிக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எந்த விதத்தில் தொடர்பு ஏற்படுத்தினாலும் … Read more

இந்திய ஹெலிகாப்டரை பயன்படுத்த அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர் – சிகிச்சை தாமதத்தால் சிறுவன் உயிரிழப்பு

புதுடெல்லி: மாலத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனை இந்திய ஹெலிகாப்டரில் அழைத்து செல்ல அனுமதி வழங்க அந்நாட்டு அதிபர் முய்ஸு தாமதித்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மாலத்தீவு ஊடகங்கள் தெரிவித்ததாவது: காஃபு அட்டோலைச் சேர்ந்த 13 வயது சிறுவனக்கு உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, இந்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர் மூலம் அந்த சிறுவனை மாலேவில் உள்ள உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி கோரப்பட்டது. … Read more

உலகின் பெரிய பணக்கார அரசியல்வாதி அதிபர் புதின்

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வ ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. தான் வசிப்பது 800 சதுர அடி வீடுதான் என்றும் தன்னிடம் 3 கார்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் முன்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. விளாதிமிர் புதின் 2012-ம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் … Read more

25 killed in missile attack on Russian-occupied Ukraine | ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதலில் 25 பேர் பலி

கீவ் : உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டனர். ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு தரப்பினருக்குமான சண்டையில் பெண்கள், குழந்தைகள், ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்கிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. … Read more

அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசி வருகிறது. பனிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தினத்தந்தி Related Tags : America  அமெரிக்கா 

மாலத்தீவு | மருத்துவ உதவிக்கு இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் அனுமதி மறுத்ததால் சிறுவன் பலி

புதுடெல்லி: மாலத்தீவில் மருத்துவ சிகிச்சைக்கான பயணத்துக்காக இந்தியா வழங்கிய டோனியர் விமானத்தை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில் அங்கு 14 வயது சிறுவன் ஒருவன் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிழந்த சிறுவன் மூளைக் கட்டி மற்றும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார். புதன்கிழமை இரவு சிறுவனுக்கு பக்கவாத பாதிப்பு தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் வசித்து வந்த தூரத்து தீவான வில்மிங்டனில் இருந்து சிகிச்சைக்காக தலைநகர் மாலேவுக்கு … Read more

மிகப்பெரும் விலைக்கு ஏலம் போன அர்னால்டின் கைக்கடிகாரம்

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மற்றும் தனது நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். 76 வயதான இவர் கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருந்துள்ளார். இவர், தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை மாசுபாடுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நன்கொடையாக அளிக்கவுள்ளதாக அறிவித்து இருந்தார். அதன்படி, அர்னால்ட் பயன்படுத்திய பொருட்களுக்கான ஏலம் ஆஸ்திரியாவில் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட் எனும் புகழ் பெற்ற தங்கும் விடுதியில் நடைபெற்றது. இதில் அர்னால்டின் … Read more

பாகிஸ்தான் – ஈரான் மோதலும் பின்னணியும்: போர் மூளும் அபாயமா?

ஈரான் – பாகிஸ்தான் இடையே நடந்த ஏவுகணைத் தாக்குதல்கள், மத்திய கிழக்கு நாடுகள் பகுதிக்குள் போர் மேகம் வலுக்கும் வாய்ப்பாக மாறும் அபாயம் உள்ளதாக கணிக்கப்படுகிறது. அதன் பின்னணி என்ன? சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷீயா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஈரானின் சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-தும் என்ற சன்னி தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ … Read more