Nauru cut off friendship with Taiwan | தைவானுடனான நட்பை துண்டித்த நவ்ரு

தைபே,: தைவானுடனான துாதரக உறவை நவ்ரு நாடு துண்டித்ததை அடுத்து அதன் துாதரக நட்பு நாடுகளின் எண்ணிக்கை 12ஆக குறைந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்நாட்டு கடல் எல்லையில் தங்கள் போர் கப்பல்கள் விமானங்கள் வாயிலாக சீனா மிரட்டல் விடுத்து வருகிறது. தைவானில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி துணை … Read more

Donald Trump who pushed Vivek, a rival | சக போட்டியாளரான விவேக்கை பொறிந்து தள்ளிய டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும் நடைமுறை இன்று துவங்குகிறது. இந்நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியை, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. முன்னதாக, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும், ‘காகஸ்’ எனப்படும் மாகாண அளவிலான உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். பாரம்பரியமாக, … Read more

தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல், கொரிய தீபகற்பத்தில் வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் வடகொரியா அதனை பொருட்படுத்தாமல் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கிடையே சமீப காலமாக இரு நாடுகளிடையேயான பனிப்போர் தீவிரம் அடைந்தது. அதன்படி தென்கொரியாவை தனது முதல் எதிரி எனவும், எங்களை சீண்டினால் தென்கொரியா முற்றிலும் அழிக்கப்படும் எனவும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் … Read more

இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்த மராபி எரிமலை

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை மீண்டும் வெடித்தது. எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 150க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று அதிகாலை 6.21 மணிக்கு எரிமலை வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. சுமத்ரா தீவின் மிகவும் … Read more

உலகின் மிக நீளமான ஓவியம்… சீனப் பெருஞ்சுவரில் கின்னஸ் சாதனை படைத்த பெண் ஓவியர்…!

பீஜிங், சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். சீனாவின் வடபுலத்தில் உள்ள மங்கோலியா என்னும் நாட்டிலிருந்து நாகரிகம் இல்லாத நாடோடிகள் அடிக்கடி படையெடுத்து வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக ஏறத்தாழ 2,200 ஆண்டுகளுக்கு முன்பு ஷயுவால்டீ என்ற மன்னன் இந்த நீண்ட சுவரை எழுப்பியதாகக் குறிப்பு உள்ளது. 13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் 32-வது … Read more

உக்ரைனில் போரிட சம்மதம்: 12 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட ரஷிய முன்னாள் மேயர் விடுதலை

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 690வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளிகள் பலரையும் உக்ரைனில் போரில் ரஷியா … Read more

100-வது நாளை எட்டிய போர்… எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது – நெதன்யாகு உறுதி

டெல் அவிவ், இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு … Read more

மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு

புதுடெல்லி: மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசியகாங்கிரஸ் தலைவர் முகமது முய்சுபுதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மாலத்தீவில் 88 இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். … Read more

US airstrikes again targeting Houthi terrorists | ஹவுதி பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் விமான தாக்குதல்

வாஷிங்டன்: சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும், ஏமன் நாட்டில் இருந்து இயங்கி வரும் ஹவுதி பயங்கரவாத அமைப்பை குறி வைத்து, இரண்டாவது நாளாக நேற்றும், அமெரிக்கா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. சரக்கு கப்பல் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மற்றொரு மேற்காசிய நாடான ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அவ்வப்போது தாக்குதல்களை … Read more