சிறையில் மனைவியின் உணவில் டாய்லெட் க்ளீனர் கலப்பு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புகார் 

இஸ்லாமாபாத்: தனது மனைவிக்கு சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் டாய்லெட் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலக்கப்பட்டதாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். அரசு ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இந்த சூழலில், தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் … Read more

ஈகுவடார் நாட்டில் எல் நினோ பாதிப்பு; 60 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்

குவிட்டோ, ஈகுவடார் நாட்டின் அதிபராக டேனியல் நொபோவா பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் அதிபராக பொறுப்பேற்று கொண்ட அவருடைய ஆட்சியில், கடந்த ஜனவரியில் முதல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதில், ராணுவம் மற்றும் போலீசார் இடையே அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது முறையாக அந்நாட்டில் நெருக்கடி நிலையை நொபோவா அறிவித்து உள்ளார். ஈகுவடாரின் எரிசக்தி உட்கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை … Read more

போர் பதற்ற சூழலில்… இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு

தெஹ்ரான், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களை கட்டமைக்க உள்ளது என்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை கூறியுள்ளன. ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும் மற்றும் குடிமக்களின் நன்மைக்காகவும் என்று கூறியுள்ளது. இந்த சூழலில், ஈராக் … Read more

ஈராக்கில் உள்ள ராணுவ படைத்தளம் மீது டிரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

பாக்தாத், ஈராக் நாட்டில் உள்ள பாபில் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் ‘கல்சு முகாம்’ என்ற பெயரில் மிகப்பெரிய ராணுவ படைத்தளம் அமைந்துள்ளது. இது ஈராக் ராணுவம், காவல்துறை மற்றும் ஹஷத் ஷாபி படைகளின் படைத்தளமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த படைத்தளத்தின் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஹஷத் ஷாபி படையைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். … Read more

எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ரத்து

புதுடெல்லி, உலக பணக்காரர்களில் ஒருவரும், ‘எக்ஸ்’ வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வருகிற 22-ந் தேதி இந்தியாவிற்கு வருகை தருவதாக அறிவித்து இருந்தார். இந்த வருகையின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளதாக எலான் மஸ்க்கும் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் முன்னதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், எலான் மஸ்கின் இந்திய … Read more

இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்…? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர் – முழு விவரம்!

Everest Fish Curry Masala: எவரெஸ்ட் மீன் கறி மசாலாவில் அதிகளவில் நச்சு பொருள் கலந்திருப்பதாக கூறி அதனை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கப்பூர் உணவு முகமை உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளை – இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் உட்பட 7 பேர் கைது

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து ஏர் கனடா விமானம் மூலம் கன்டெய்னர் ஒன்று பியர்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதில், 400 கிலோ தூய தங்க கட்டிகளும், 2.5 மில்லியன் கனடா டாலரும் இருந்தன. விமானநிலையத்தின் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த கன்டெய்னர் அன்றைய தினமே போலிஆவணம் மூலம் திருடப்பட்டது. இதுதொடர்பாக, காவல் துறை நடத்திய விசாரணையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பரம்பால் … Read more

மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து – மறுவிசாரணைக்கு உத்தரவு

மாலே, மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன், கடந்த 2013-2018 வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு தீவை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்நாட்டின் நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல்லா யாமீன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டையை எதிர்த்து அப்துல்லா யாமீன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை … Read more

பாகிஸ்தானில் ஜப்பானியர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரின் கிளிப்டன் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த ஜப்பான் நாட்டவர்கள் 5 பேர், இன்று காலையில் ஏற்றுமதி மண்டலம் நோக்கி வேனில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாவலர்கள் 2 பேர் சென்றனர். புறநகர்ப் பகுதியான லண்டியில் உள்ள முர்தசா சோரங்கி அருகே சென்றபோது, பைக்கில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வழிமறித்து, வேனில் மோத முயன்றனர். இதனால் சுதாரித்த பாதுகாவலர்கள், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி உயிரிழந்தான். … Read more

ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு

லண்டன்: ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் மாலை, சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. … Read more