Amazing win for Indian team: beat South Africa | இந்திய அணி அசத்தல் வெற்றி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகத்தில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங் 5, அவேஷ் கான் 4 விக்கெட் கைப்பற்றினர். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இந்திய ‘லெவன்’ அணியில் தமிழகத்தின் சாய் … Read more

ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

டெஹ்ரான்: இஸ்ரேல் உளவாளி ஒருவர் ஈரானில் தூக்கில் இடப்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று வெளியிட்ட செய்தியில், “இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட் உட்பட வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒருவர் (விவரம் தரப்படவில்லை) சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஈரான் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஜாஹேதான் நகரில் உள்ள சிறையில் அவருக்கு தூக்கு … Read more

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கரோனா தொற்று: புதிய ஜேஎன்1 கரோனா திரிபில் இருந்து மீண்ட கேரள பெண்மணி

புதுடெல்லி: சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி அந்நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டுகண்டறியப்பட்ட கரோனா வைரஸ்தொற்று பின்னர் உலகம் முழுவதும்பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை: டிசம்பர் 3 … Read more

Israeli army mistakenly shot three hostages | பிணைக்கைதிகள் மூவரை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்

ரபா: காசாவில், பயங்கரவாதிகள் என நினைத்து, பிணைக்கைதிகள் மூன்று பேரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்., 7ல் திடீர் தாக்குதல் நடத்தியது. தொடர் தாக்குதல் இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான போர், இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். … Read more

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் உடல்நலக்குறைவால் காலமானார்

குவைத், குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபா, தனது 86வது வயதில் காலமானார். இந்த தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் குவைத் அரசு தெரிவித்துள்ளது. அதில், குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது. தனது சகோதரர் மறைவுக்கு பின் 2020-ல் மன்னராக பொறுப்பேற்ற அவர், மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். கடந்த மாதம் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

Order to wear corona face shield again in Singapore | சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா முக கவசம் அணிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் முக கவசம் அணியும்படி, மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரில், ‘புளூ’ எனப்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பும் கடந்த சில வாரங்களில் திடீரென அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் ஒரு நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 225ல் இருந்து 350ஆக உயர்ந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் … Read more

இனி விசா தேவையில்லை… இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான் அரசு

தெஹ்ரான், மேற்காசிய நாடான ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி, ‘ஈரானின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை … Read more

The King of Kuwait Sheikh Nawab passed away | குவைத் நாட்டு மன்னர் ஷேக் நவாப் காலமானார்

துபாய்: குவைத் நாட்டு மன்னர் ஷேக் நவாப் அல் அஹமது அல் சபா, 86, நேற்று காலமானார். மேற்கு ஆசிய நாடான குவைத்தின் மன்னராக இருந்தவர் ஷேக் நவாப் அல் அஹமது அல் சபா. கடந்த மாதம் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அமைச்சர் ஷேக் முஹமது அப்துல்லா அல் சபா அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பு, … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் இலங்கை…!

கொழும்பு, இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால், உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் … Read more

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இஸ்லமபாத், பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தை கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கலைத்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தற்போது அன்வர் உல் ஹக் காகர் காபந்து பிரதமர் பொறுப்பில் இருந்து வருகிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்ட அதிகரிகள் நியமனத்தை லாகூர் ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், லாகூர் கோர்ட்டின் உத்தரவை நேற்று … Read more