பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த நிலையில் திடீரென அந்த பள்ளிக்கூடம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து … Read more

ஆமதாபாத்திலிருந்து துபாய் சென்ற விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்

கராச்சி, ஆமதாபாத்திலிருந்து போயிங் 737 ஸ்பேஸ் ஜெட் விமானம் துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த நபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானம் அவசரமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. உடனடியாக அந்த நபர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அந்த நபர் யார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதைப்போலவே கடந்த மாதம் 23-ம் தேதி அன்று ஐதராபாத் சென்று கொண்டிருந்த … Read more

யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்? இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

Gurpatwant Singh Pannun Threat: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் யார்? ஏன் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கப் போவதாக மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளார். இவருக்கும், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையும் என்ன சம்பந்தம்? முழு விவரம் இதோ.

ஹோண்டுராஸ் பேருந்து விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் காயம்

டெகுசிகல்பா, அமெரிக்காவின் ஹோண்டுராசில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 60 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உள்ள ஓடையில் விழுந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதில் … Read more

கயானாவிடம் உள்ள எஸ்சிகிபோ எங்கள் பகுதி.. வெனிசுலாவில் பொது வாக்கெடுப்பு: 95% ஆதரவு

வெனிசுனாவின் அண்டை நாடு கயானா. இந்த நாட்டின் எண்ணெய்வளம் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த எஸ்சிகிபோ பிராந்தியம் மீது வெனிசுலா உரிமை கொண்டாடுகிறது. இதற்காக சர்வதேச நடுவர் மன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எல்லை வரையறுக்கப்பட்டபோது, அந்த பகுதியானது தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது என்றும், அந்த பகுதியை 1899ஆம் ஆண்டு கயானாவை ஆண்ட காலனி ஆதிக்க சக்தியான பிரிட்டனுக்கு வழங்குவதற்கு சர்வதேச நடுவர் மன்றம் எடுத்த முடிவு நியாயமற்றது என்றும் வெனிசுலா நீண்டகாலமாக … Read more

இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக 'ரிஸ்' தேர்வு.. அதன் பொருள் என்ன தெரியுமா?

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை வெளியிடும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. சிறந்த வார்த்தை தேர்வுக்காக இறுதியாக பட்டியலிடப்பட்ட 8 வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த 8 வார்த்தைகளும், 2023ல் மக்களின் மனநிலை, ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் சிறந்த வார்த்தையாக ரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். நண்பர்கள் … Read more

மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த தீவிரவாதி சஜித் மிர்ருக்கு சிறையில் விஷம்

இஸ்லாமாபாத்: மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான தீவிரவாதி சஜித் மிர்ரை பாகிஸ்தான் சிறையில் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை சஜித் மிர்ருக்கு வழங்கப்பட்டது. அவர், அங்குள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மிர் திடீரென, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் இருந்தபோது அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும், … Read more

Hamas drug the hostages | பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்த ஹமாஸ் இயக்கம்

இஸ்ரேல்: இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த அக்டோபரில் துவங்கியது. ஹமாஸ் இயக்கத்தால் காசாவிற்கு கடத்திச்செல்லப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டுவதற்காக போதைப்பொருள் கொடுத்து உட்கொள்ளச் செய்ததாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து கடத்திச்சென்ற இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக 51 நாட்கள் வைத்திருந்தது. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த பேச்சு வார்த்தையின்போது இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளுக்கு இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு அழைத்துச்சென்று … Read more

தாய்லாந்து பணயக் கைதிகள் 6 பேரை விடுதலை செய்தது ஹமாஸ்

பாங்காக்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். பலரை கொன்று குவித்ததுடன், சுமார் 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா முனையை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலகளை நடத்துகின்றனர். இதில் … Read more