உக்ரைன் போருக்கிடையிலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் ரஷ்யா… நிலவின் சுற்றுப்பாதையில் லூனா 25!

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு நடத்தி வரும் தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இருநாடுகளும் உயிர்ச்சேதத்தையும் பொருட் சேதத்தையும் சந்தித்து வருகின்றன. ஒரு பக்கம் போர், அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு அச்சுறுத்துவது, எதிரி நாடுகளுடன் மல்லுக்கட்டுவது என்று இருந்தாலும் தனது காரியத்திலும் கண்ணாக உள்ளது ரஷ்யா. இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பியதுமே ரஷ்யா, தனது லூனா 25 விண்கலத்தை … Read more

2050ல் காத்திருக்கும் பெரிய ஆபத்து… இந்த 25 நாடுகளில் குடிநீருக்கு திண்டாட்டம்… என்ன காரணம் தெரியுமா?

தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் நடந்தாலும் ஆச்சரியமில்லை என்று சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்து வருகின்றன. குடிநீர் மிகப்பெரிய வர்த்தகமாக உலகம் முழுவதும் காணப்படுகிறது. தண்ணீரின்றி எந்த ஒரு உயிரும் வாழ முடியாது என்ற நிலை உள்ளது. தண்ணீரை அனைவருக்கும் பகிர வேண்டியது மனிதர்களின் கடமையாக இருக்கிறது. தண்ணீர் பிரச்சினை ஆனால் போதிய நீர் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறதா? என்றால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது. தற்போதைய சூழலில் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு … Read more

சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்கள்: போலீஸுக்கு உதவிய AI கேமரா!

லண்டன்: பிரிட்டனில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3 நாட்களில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்களை போலீஸுக்கு அடையாளம் காட்டியுள்ளது ஏஐ கேமரா. கடந்த ஆண்டு இதை பொருத்தி சோதனை ஓட்டம் பார்த்துள்ளனர் டெவன் மற்றும் கார்ன்வால் பகுதி போலீஸார். அதில் வாகனம் ஓட்டியபடி போனில் பேசியவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களை ஏஐ கேமரா சுட்டிக்காட்டியுள்ளது. அந்த காட்சியை மனிதவளத்தை கொண்டு உறுதி செய்த பின்னர் அபராதம் விதிக்கலாம் என போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், … Read more

பாகிஸ்தானில் சூரையாடப்படும் தேவாலயங்கள்… பாதிரியார்கள் கடும் கண்டனம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன.

பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.290, டீசல் ரூ.293

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 14-ம் தேதி அன்வர் உல் ஹக் ககர் இடைக்கால பிரதமராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிபொருள் மட்டுமல்லாது, தக்காளி, வெங்காயம், அரிசி, கேஸ் சிலிண்டர் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. … Read more

பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளார்களா…? இலங்கை அரசு மறுப்பு

கொழும்பு, இலங்கையில் முப்பது ஆண்டுக் காலமாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிரிழந்ததாகவும் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெண் சமூக … Read more

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் அதிரடி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. வன்முறை தொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது … Read more

மியான்மரில் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

யாங்கூன், மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுப்பது பரவலாக மேற்கொள்ளப்படும் தொழில் ஆகும். அதன்படி கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் … Read more

2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து உறுதி

லண்டன், இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன. எனவே இதனை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும் நன்மைகளையும் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் … Read more