World Oceans Day | உலக பெருங்கடல் தினம்

பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது. பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘கோள் பெருங்கடல்: அலைகள் மாறி வருகின்றன’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.* மூளையின் எந்தப் பகுதியிலும் அசாதாரண செல்கள் உருவாகும்போது மூளைக் கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 8ல் உலக மூளைக் கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் … Read more

உக்ரைன் அணை மீது தாக்குதல் : வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்

உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள அணை தகர்க்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் அமைந்துள்ள கக்கோவ்கா அணையை உக்ரைன் படைகள் தகர்த்ததாக ரஷ்யாவும், ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததாக உக்ரைனும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன. அணையில் இருந்து வெளியேறிய பல மில்லியன் கன அடி தண்ணீரால் 24 கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரப்பர் படகுகள் மற்றும் தண்ணீரில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் … Read more

பென்சில்வேனியாவில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட மின் உற்பத்தி ஆலையின் புகைபோக்கிகள்..!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மின் உற்பத்தி ஆலையின் புகைபோக்கிகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. ஸ்பிரிங்க்டேல் பகுதியில் செஸ்விக் ஜெரேட்டிங் ஸ்டேஷன் என்ற, மின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆலை மூடப்பட்ட நிலையில், செயல்படாமல் இருந்த புகைப்போக்கிகளை கடந்த 2ம் தேதி அந்நிறுவனமே வெடிவைத்து தகர்த்தது. பலத்த சத்தத்துடன் 2 புகைப்போக்கிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்து நொறுங்கியதில், பெரும் புழுதி கிளம்பியது. Source link

லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் அரியவகை சுமத்ரா புலிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடி குதூகலம்

லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் அரியவகை சுமத்ரா புலிக்குட்டிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடின. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் புலிகள், வனப்பகுதிகளில் தற்போது 300 மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள சுமத்ரா புலிக்குட்டிகள், தாய் புலியின் மேற்பார்வையில் குதூகலமாகத் தண்ணீரில் விளையாடி பொழுதுபோக்கின. Source link

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் உயிரிழப்பு..!

வாஷிங்டன், அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார். விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தின் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த பகுதியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக … Read more

World Test Championship Final: India Bowling | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: இந்தியா பவுலிங்

லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ‘டாஸ்’ வென்று, ‘பவுலிங்’ தேர்வு செய்தது. இப்போட்டியில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டையுடன் விளையாடினர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலுக்கு தகுதி … Read more

உக்ரைனின் அணையில் உடைப்பு – பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 469 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் கக்ஹொவ்ஸ்கா என்ற அணை உள்ளது. இந்த அணையில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் … Read more

Pakistan leases out iconic Roosevelt Hotel in New York to NYC Administration for three years; aims to generate$220 million | பொருளாதார நெருக்கடி: பிரபல ஓட்டலை குத்தகைக்கு விட்ட பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை, நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு 220 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பு படி ரூ.1815 கோடி) குத்தகைக்கு விட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் உச்சத்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்வில் இரு வேளை உணவு கிடைக்கவே போராடி … Read more

சூரினாமில் வாழும் இந்தியர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு

பராமரிபோ, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி திரவுபதி முர்மு சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். தொடர்ந்து சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் … Read more

உக்ரைன் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது: ஐ. நா. கண்டனம்

கீவ்: உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் … Read more