குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்’ விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். 3 நாள் பயணமாக சுரினாம் சென்றுள்ள குடியரசு தலைவர் முர்மு, 1873-ம் ஆண்டு சுரினாமுக்கு கப்பல் மூலம் இந்தியர்கள் சென்றதன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கலாச்சார விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தமக்கு வழங்கப்பட்டுள்ள சுரினாமின் உயரிய விருதை இந்திய-சுரினாமியர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். … Read more

Russia-Held Ukraine City Novaya Kakhovka Flooded After Dam Blown Up: Report | உக்ரைனில் அணை மீது தாக்குதல்: வெள்ளக்காடான நகரம்

கீவ்: ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள நோவா ககோவ்கா நகரில் உள்ள அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அந்த அணை சேதம் அடைந்ததால், அந்நகரம் வெள்ளக்காடானது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. நோவா ககோவ்கா நகரில் டினீப்பர் ஆற்றில் இயங்கும் ககோவ்கா நீர் மின் நிலையத்தில் உள்ள அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உடைந்த அணையில் இருந்து 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியதாக … Read more

அமெரிக்காவில் பரபரப்பு: வாஷிங்டன் மீது தாறுமாறாக பறந்த விமானம்

வாஷிங்டன், அமெரிக்காவில், டென்னசி மாகாணம் எலிசபெத்டானில் இருந்து செஸ்னா சிட்டேசன் என்ற குட்டி விமானம் புறப்பட்டது. அந்த விமானம், லாங் தீவின் மாக்ஆர்தர் விமான நிலையத்தை நோக்கி சென்றது. ஆனால், வழி தவறியதோ, என்னவோ தெரியவில்லை. திடீரென தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்தது. வாஷிங்டனுக்கு நேர் மேலே தாறுமாறாக பறந்தது. ரேடியோ சாதனம் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, விமானத்தை கொண்டு முக்கிய கட்டிடங்களை இடிக்கும் சதித்திட்டமாக இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டது. … Read more

உக்ரைனின் மிகப் பெரிய அணையை தகர்த்த ரஷ்யா… அழிவின் விளிம்பில் உக்ரைன்?

உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணை ரஷ்ய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்டும் அழிவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

13-ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட மசூதி மறுசீரமைப்புக்கு பின் மீண்டும் திறப்பு…!

எகிப்தில் 13ம் நூற்றாண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அல்-சாஹிர் பேபர்ஸ் மசூதி, புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1268ம் ஆண்டு கெய்ரோவில் 3 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மசூதி, எகிப்தின் மூன்றாவது பெரிய மசூதியாக பார்க்கப்பட்டது. பின்னர், பல்வேறு ஆட்சிக் காலங்களில் இராணுவக் கோட்டையாகவும், சோப்பு தொழிற்சாலையாகவும், இறைச்சிக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு, 225 ஆண்டுகளாக கைவிடப்பட்ட இந்த மசூதி சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், சுமார் 7.69 மில்லியன் டாலர்கள் செலவில் 16 … Read more

பிலிப்பைன்சில் மேயோன் எரிமலை வெடிக்கும் அபாயம்..!! விமானங்கள் பறக்க தடை

மணிலா, பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி எரிமலை சீற்றம் காரணமாக கடும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் லூசன் தீவில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் பிரபல சுற்றுலா தலமான மேயோன் நகரில் உள்ள எரிமலைக்கான எச்சரிக்கையை இரண்டாவது நிலைக்கு உயர்த்தியது. இது கடந்த 400 ஆண்டுகளில் 50 முறைக்கும் மேல் வெடித்துள்ள ஒரு எரிமலை ஆகும். இதனால் … Read more

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளது: அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே, நேற்று(ஜூன்5) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடில்லிக்குச் செல்லும் எவரும் அதைத் தாங்களாகவே பார்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள இருக்கும் அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா … Read more

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு; 30 பேர் பலி

அபுஜா, நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அதன்படி வடமேற்கு மாகாணமான சொகோடாவில் உள்ள ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் தொடுத்தனர். அப்போது துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கும் … Read more

அமெரிக்காவில் திசை மாறி வாஷிங்டன் நோக்கி பறந்த விமானத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலிருந்து லாங் தீவில் உள்ள மாக் ஆர்தர் என்ற தீவை நோக்கிச் சென்றது. ஆனால் விமானத்தின் ரேடார் சிக்னல் குளறுபடியால் விமானம் இலக்கை நோக்கி செல்லாமல் வாஷிங்டன்னை நோக்கி பறந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. … Read more

அமெரிக்காவில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட இந்திய சிறுவன் மீட்பு..!

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் சீனிவாச மூர்த்தி ஜொன்னலகடா. இந்திய வம்சாவளியான இவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சாண்டா குரூஸ் பகுதியில் உள்ள பாந்தர் ஸ்டேட் கடற்கரைக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவரது 12 வயது மகன் கடலில் குளித்துக்கொண்டிருந்தான். திடீரென எழும்பிய ராட்சத அலையில் அவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டான். இதனையடுத்து சீனிவாச மூர்த்தி வேகமாக கடலுக்குள் இறங்கி தனது மகனை காப்பாற்றினார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் துரதிர்ஷ்டவசமாக கடலுக்குள் இழுத்து … Read more