திருப்பதியில் தொடர் கனமழை – பக்தர்கள் அவதி

திருப்பதி, திருமலை திருப்பதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருப்பதியில் ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக சென்ற பக்தர்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். தரிசனத்தை முடித்துவிட்டு தங்கள் அறைகளுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அதுமட்டுமின்றி, கனமழையின் காரணமாக திருப்பதி மலைப்பகுதியில் பாறைகள், கற்கள் பெயர்ந்து விழும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. எனவே, திருமலைக்கு வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், … Read more

அதானி குழுமத்தில் முதலீடு செய்ய எல்ஐசி-க்கு நிர்பந்தமா? காங்கிரஸ் கிடுக்கிப்பிடி கேள்வி

புதுடெல்லி: அதானி குழுமத்துக்குப் பயனளிக்கும் வகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -“இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் ‘மோதானி’ எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி … Read more

மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

மும்பை, மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.36 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 19.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.22 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் … Read more

பருவமழை எதிரொலி: களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சொல்கிறது சென்னை மாநகராட்சி…

சென்னை: பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள  களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில், பருவமழை பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர். பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள், 500 டிராக்டர்கள், 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. பருவமழை என்றலே சென்னை மாநகர மக்களின் வயிற்றில் புளியை கரைப்பது வாடிக்கையாகவே உள்ளது. … Read more

அரியானாவில் ஓடும் காரில் கதவை திறந்து சிறுநீர் கழித்த விவகாரம் – இருவர் கைது

சண்டிகர், அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சாகர் பஜார் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து 2 பேர் கதவை திறந்து சிறுநீர் கழித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி ஜஜ்ஜார் மாவட்டம் தாதன்பூர் கிராமத்தை சேர்ந்த மோகித்(வயது 25) மற்றும் … Read more

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிப்பு…

சேலம்: நடப்பாண்டு 7வது முறையாக முழு கொள்அளவை எட்டியுள்ள மேட்டூர் அணையின்  நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாக தொடர்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதுபோல காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது. இதனால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக,  மேட்டூர் … Read more

சாலை பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது விபத்து; சகோதரனுடன் பைக்கில் சென்ற ஐ.டி. பெண் ஊழியர் பலி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மதநாயக்கன ஹள்ளி – ஹூஸ்கூர் சாலையில் ஐ.டி. பெண் ஊழியர் பிரியங்கா(வயது 26), தனது சகோதரனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சாலையில் இருந்த குழியை தவிர்ப்பதற்காக அவரது சகோதரர் பைக்கை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணிந்திருந்த சகோதரர் உயிர் தப்பிய நிலையில், ஹெல்மெட் அணியாத பிரியங்கா பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் … Read more

தனியார் மயம் – நிரந்தர பணி: எழும்பூர் ராஜாஜி திடலில் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: தனியார் மயம் – நிரந்தர பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் இன்று  எழும்பூர் ராஜாஜி திடலில் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். சென்னை எழும்பூர் இராஜாஜி திடல் மைதானம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டலம் 5 மற்றும்  மண்டலம் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் பல தூய்மை பணியாளர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். தூய்மைப் … Read more