‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ : பிரியங்கா காந்தி

நாட்டில் தற்போது பிரிட்டிஷ் ஆட்சியைப் போன்ற நிலை உள்ளதாகவும், ‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரியங்கா இவ்வாறு பேசினார். ‘வாக்கு திருட்டு மூலம் பீகாரில் ஒரு அரசாங்கத்தை அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சிக்கிறது’ என்று கூறிய பிரியங்கா காந்தி, ‘மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன’ என்று குற்றம் … Read more

பஞ்சாப்: கபடி வீரர் சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் குர்வீந்தர் சிங். இவர் மாவட்ட அளவில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர் ஆவார். இந்நிலையில் குர்வீந்தர் சிங் நேற்று மாலை சமரலா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், குர்வீந்தர் சிங்கின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, குர்வீந்தர் சிங் … Read more

வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் – 600 பேருக்கு வேலை வாய்ப்பு!

வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைப்பதற்காக 4.98 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதில் கடந்த 18-2-2023 அன்று முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசின் டிட்கோ (TIDCO) மற்றும் எல்காட் (ELCOT) நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியே, இந்த ஐடி பூங்கா. தற்போது, கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் … Read more

யார் இந்த ‘ஸ்வீட்டி’… 22 வாக்காளர் அட்டையுடன் ஹரியானா தேர்தலில் வாக்களித்த மாடல் அழகி குறித்த அதிர்ச்சி தகவல்…

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் வெவ்வேறு பெயர்களுடன் பல முறை பயன்படுத்தப்பட்டதாகவும், அது தேர்தல் முடிவைப் பாதித்ததாகவும் ராகுல் காந்தி இன்று குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த ஹைட்ரஜன் குண்டு வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு நாளில் காங்கிரஸ் முகவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று சால்ஜாப்பு கூறியுள்ளது. “தி எச் ஃபைல்ஸ்” என்ற தலைப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஹரியானா … Read more

டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

டெல்லி, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதேவேளை, அவரது கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, வெள்ளை மாநிலை செய்தித்தொடர்பாளர் கரோலின் கடந்த சில நாட்களுக்குமுன் அளித்த பேட்டியில், வர்த்தகம் பிற ஒப்பந்தங்கள் தொடர்பாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், இந்திய பிரதமர் மோடியும் அடிக்கடி பேசி வருகின்றனர்’ என்றார். இந்நிலையில், டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? … Read more

Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீது அபராதம்

2025 ஆம் ஆண்டு ஐசிசி ஆசியக் கோப்பைப் போட்டிகளின் போது பல நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று (நவ 4) உறுதிப்படுத்தியது. குறிப்பாக செப்டம்பர் 14, 21 மற்றும் 28 தேதிகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகளில் சம்பவங்கள் குறித்து எமிரேட்ஸ் ஐ.சி.சி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரீ உறுப்பினர்களால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பர் 14 போட்டியில் இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் … Read more

தவெகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! முழு விவரம்

சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில், நடைபெற்ற தவெக வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 12  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  2000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  சுமார் காலை 10.30  மணிக்கு தொடங்கியது. அப்போது , கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு, அக்கட்சியின் … Read more

உ.பி: தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 4 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம் சனூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று பிரயாக்ராஜ் – சோபன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் இருந்து பயணிகள் நடைமேடையில் இறங்கினர். அப்போது சில பயணிகள் எதிரே உள்ள நடைமேடைக்கு செல்ல படிகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து நடைமேடையில் ஏற முயற்சித்தனர். இந்நிலையில், பயணிகள் தண்டவாளத்தை கடந்துகொண்டிருந்தபோது அந்த தண்டவாளத்தில் ஹவுரா – கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்தது. இதில், தண்டவாளத்தை கடக்க … Read more

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம் | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் தனிநபர் மொபிலிட்டி சார்ந்த தேவைகளின் எதிர்கால மாடலாக நோவஸ் சீரிஸ் NEX 1, NEX 2, NEX 3 என மூன்று கான்செப்ட்களை EICMA 2025 கண்காட்சில் காட்சிப்படுத்தியுள்ளது. Hero Vida Novus series “VIDA Novus” எனும் புதிய மின்சார வாகன வரிசையை அறிமுகப்படுத்தியுள்ள ஹீரோ மோட்டோகார்ப் இதனை “Life is Movement” என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு, மனிதர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற … Read more

தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்?

தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்? தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சண்டி ஹோமம் சண்டி என்ற மகாசக்தி ஆதிதேவியர்களான கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரும் ஒன்றிணைந்த வடிவம். இவர்களை வெல்லவே முடியாது என்பதை நிரூபித்த நாள்களே … Read more