குஜராத்தில் மந்திரிகள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா

அகமதாபாத், குஜராத்தில் முதல் மந்திரி பூபேந்திர படேல் மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் 16 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். புதிய மந்திரிகள் பதவியேற்க ஏதுவாக தற்போது பதவியில் இருந்த 16 பேரும் ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது. இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பை சேர்ந்தவர்களுக்கும் புதிய மந்திரி சபையில் வாய்ப்பளிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. புதிதாக மந்திரிகளாக பதவியேற்க உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலோடு இன்று இரவு கவர்னரை முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்திக்க உள்ளார். நாளை … Read more

Bison: “எந்த நிகழ்வுகளும் உண்மையாகக் காட்டப்படவில்லை!" – ரிலீஸுக்கு முன் மாரி செல்வராஜ் அறிக்கை!

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன்’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் `பைசன்’ திரைப்படம் என இத்திரைப்படம் தொடங்கிய நாள் முதல் பேசப்பட்டு வந்தது. `பைசன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் மணத்தி கணேசனின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். Mari Selvaraj துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் … Read more

வெனிசுலாவுக்கு எதிரான சிஐஏ நடவடிக்கைக்கு டிரம்ப் ஒப்புதல்…

வெனிசுலாவுக்கு எதிரான ரகசிய சிஐஏ நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான வெனிசுலா சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “போதைப்பொருள்-பயங்கரவாத” ஆட்சியை நடத்திவருவதாகவும், சிறைகளில் இருந்து கைதிகளை விடுவித்து அமெரிக்காவிற்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டும் அமெரிக்கா அந்நாட்டு கடற்பகுதியில் சுற்றித்திரியும் படகுகளில் போதைப் பொருள் இருப்பதாகக் கூறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரோவுக்கு … Read more

கச்சா எண்ணெய் இறக்குமதி – டிரம்ப் கருத்துக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்காது என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:- கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. நமது இறக்குமதி கொள்கைகள் முழுமையாக இந்த நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றன. … Read more

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

டாப் Fearless +PS வேரியண்டின் அடிப்படையிலான டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பெற்ற நெக்ஸான் வேரியண்டில் மட்டும் ரூ.13.53 லட்சம் ஆகவும், ரெட் டார்க் எடிசனில் ரூ.13.81 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. கூடுதலாக, ரெட் டார்க் எடிசனில் சிஎன்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் 5 விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது. Tata Nexon ADAS இந்திய சந்தையின் மிகவும் பிரசத்தி பெற்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள காம்பேக்ட் எஸ்யூவி மாடலான நெக்ஸானில் உள்ள … Read more

கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – சட்டமன்றத்தில் பட்டியலிட்ட அமைச்சர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். கிட்னி திருட்டு அமைச்சர் மா. சுப்ரமணியன் தனது உரையில், “சிறுநீரக முறைகேடு நடைபெறுவதாக வந்த புகார் குறித்து, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மருத்துவர் வினித் விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க … Read more

பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வரும்! சட்டப்பேரவையில் டி.ஆர்.பி. ராஜா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு உறுதியாக வரும் என சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், இதன்மூலம் 14ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என புகைப்படத்துடன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் ராபர்ட் வூ, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், ‘தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், … Read more

ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அமராவதி, ஆந்திர மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். முன்னதாக கர்னூல் மாவட்டத்திற்கு விமானம் மூலம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கவர்னர் அப்துல் நசீர் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். இதையடுத்து பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்றார். ஜோதிர்லிங்கமும், சக்தி பீடமும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும். அங்கு சென்று பிரதமர் மோடி … Read more

Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' – பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் 14000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்திருந்தார். CM Stalin அந்நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி ராபர்ட் வூ தமிழக முதல்வரை சந்தித்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். ஆனால், ஃபாக்ஸ்கான் நிறுவன தரப்பில் ஆங்கில ஊடகம் ஒன்றில், ‘நாங்கள் தமிழ்நாட்டில் புதிதாக எந்த முதலீடையும் செய்யவில்லை.’ … Read more

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை! பேரவையில் துணைமுதல்வர் தகவல்

சென்னை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்  தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது நாள் கூட்டத்தில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்றது. அப்போது  எம்.எல்.ஏக்கள் கேட்கும் வினாக்களுக்கு அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது மகளிர் உரிமை தொகை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு துணைமுதல்வர் உதயநிதி பதில் கூறினார். அப்போது, புதிதாக விண்ணப்பித்தவர்கள்,  கலைஞர் மகளிர் டிசம்பர் 15ஆம் தேதி முதல்  … Read more