“சென்னை மெட்ரோ முதலிடம்'' – 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு – என்ன சொல்கிறது?

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளதாக வாடிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆய்வு அறிக்கை ‘COMET (Community of Metros)’ என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ இரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். … Read more

Diwali ''நான் 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்' பொண்ணு'' – நடிகை ஜெயா சீல் பேட்டி

‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…’ – 2000-ல் லவ் பண்ணவங்கள்ல ஆரம்பிச்சி, 2000-ல பிறந்து இப்போ லவ் பண்றவங்க வரைக்கும், இந்தப் பாட்டு இன்னமும் எவெக்ரீன் ‘லவ் சாங்’காகத்தான் இருக்கு. இந்தப் பாட்டு இடம்பெற்ற படம் ‘பெண்ணின் மனதைத் தொட்டு’. நடிகை ‘ஜெயா சீல்’ இந்தப்படத்துல தான் தமிழ்ல அறிமுகமானாங்க. சமீபத்துல ‘அவள் விகடன்’ சேனலுக்கு அவங்க ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க. ‘பெண்ணின் மனதை தொட்டு’ படத்தில் நடிகை ஜெயா சீல் ”சாதாரண குடும்பத்துல பிறந்த பொண்ணு … Read more

`அழகுக்கு அரோமா ஆயில்' – எந்தப் பிரச்னைக்கு எந்த ஆயில்? சொல்கிறார் நிபுணர்!

’சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது அரோமா ஆயில்’ என்கிற அரோமா தெரப்பிஸ்ட் கீதா அஷோக், அரோமா ஆயில்களின் உதவியுடன் வீட்டிலேயே அழகாகும் வழிகளைச் சொல்கிறார். அழகுக்கு அரோமா ஆயில் சரும துவாரங்கள் சுத்தமாகும்..! தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும். பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் … Read more

ஹாங்காங் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ சரக்கு விமானம் விபத்து – 2 விமான நிலைய ஊழியர்கள் உயிரிழப்பு!

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெரிய விபத்து நடந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த “ஏர் ஆக்ட்” என்ற நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானம் (எமிரேட்ஸ் ஸ்கைகார்கோவின் EK9788 எனும் விமானம்) ஓடுபாதையை விட்டு விலகி கடலில் விழுந்தது. விமானம் தரையிறங்கும் போது திடீரென இடதுபுறம் திரும்பி, ஒரு சேவை வாகனத்தில் மோதி கடலில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்த இரண்டு விமான நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த பைலட் … Read more

தித்திப்பு நாள்… தீபாவளி!!

தித்திப்பு நாள்… தீபாவளி!!   விழாவின் ஆணிவேர் என்ன என்பதை தேடாமல்…. மகிழ்ச்சியோடு விழாவை வரவேற்போம் !!!! இன்று ஒரு நாள் இலக்குகளை ஒதுக்கி வைப்போம்… களிப்புறுவோம் குடும்பத்தோடு!!! எட்டு திக்கிலும் ஏற்றி வைப்போம் மகிழ்ச்சி தீபத்தை, இதயங்கள் ஒளி பெறட்டும்!!! நெருப்(பு)பூக்கள் நாற்புறமும் நடனமிடும்…. ரசித்திடுங்கள் சிறுவர்களாகவே!! வற்றாத கங்கையைப் போல மகிழ்ச்சியும் புது வெள்ளமாய் பரவட்டும்!! அசுர குணங்களை வேரறுத்து தேவ குணங்களை தெளிவாக இன்றே பின்பற்றுவோம்!!! கோப தாபங்கள் சுயநல, எண்ணங்களை விட்டொழிப்போம்! … Read more

வாலிபரின் காதல் தொல்லையால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சனா பர்வீன் (19 வயது). இவர் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து வந்தார். இதே கல்லூரியில் ரிபாஸ் என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். அவருடன் சனா பர்வீன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் ரிபாஸ், சனா பர்வீனை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சனா பர்வீனுக்கு அவர் காதல் தொல்லை கொடுத்து, தகராறு செய்தார். இதனால் மனம் … Read more

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை; நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் புகார் … Read more

தேர்தலில் சீட் மறுப்பு; லாலு பிரசாத் வீட்டின்முன் கண்ணீர் விட்டு அழுத கட்சி நிர்வாகி

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம்கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில … Read more

நாளை தீபாவளி: எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி, செல்பெருந்தகை, அன்புமணி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில்,   எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ரதுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எப்போதும்போல இந்துக்கள் பண்டிகை என்பதால் வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை. தீபாவளி திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி  விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் … Read more

தெலுங்கானா: சட்டசபை தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆக குறைக்க மசோதா

ஐதராபாத், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை நினைவு கூறும் வகையில் யாத்திரை நிகச்சி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி கூறுகையில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் நாட்டில் வாக்களிக்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 21ல் இருந்து 18 ஆக அப்போது … Read more