நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் Source link
ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் அஷுடோஷ் கோஸ்வாமி. இவருக்கும் மணிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அஷுடோஷ் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் அவரை அவதூறாக பேசி மனதளவில் காயப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மணிஷா, தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். … Read more
பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியாக பேசியவை இங்கே. Team India ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, ”ரொம்பவே பெருமையாக இருக்கிறது. என்னாலயே நம்பவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் எதை எதிர்பார்த்தோமோ அது நடந்திருக்கிறது. இந்தத் தொடரில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். ஆனால், செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். எங்களுக்கு சாதகமான ரிசல்ட்டை மட்டுமே கொடுக்கும் வகையிலான … Read more
சென்னை: நகராட்சி துறையில் ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் புகார் தொடர்பான அமைச்சர் நேருவின் மறுப்புக்கு அமலாக்கத்துறை பதில் தெரிவித்துள்ளது. தங்களிடம் ஆதாரம் உள்ளது என்று கூறி உள்ளது. நகராட்சி துறையில் அரசு பணி நேரடி நியமனத்தில், ரூ.888 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது, அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்த நிலையில், இது மத்தியஅரசின் சூழ்ச்சி என அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்திருந்தார். இதையடுத்து அமலாக்கத்துறை ஊழல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. ‘வேலைவாய்ப்பு மோசடி புகார் தொடர்பான Whatsapp … Read more
பெண்கள் உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதமடித்து கடைசி வரை நின்று போட்டியை வென்று கொடுத்திருக்கிறார். ஜெமிமா நவி மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஸா ஹீலிதான் டாஸை வென்றிருந்தார். ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் அத்தனை விக்கெட்டுகளையும் இழந்து 338 … Read more
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்திர விழாவையொட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்கு ஓ. பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் ஒரே காரில் வந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அது தனக்கு தெரியாது என்றும், அவர்கள் வந்தால்தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன் என்றார். பசும்பொன் … Read more
பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. சவால் நிறைந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெமிமா சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்களை சேர்த்து அணியை வெல்ல வைத்தார். அவருக்குதான் ப்ளேயர் ஆப் தி மேட்ச் விருதும் வழங்கப்பட்டது. ஜெமிமா விருதை வாங்கிவிட்டு நெகிழ்ச்சியாக பேசிய அவர், ”என்னுடைய அம்மா, அப்பா, பயிற்சியாளர் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்திருந்த அத்தனை பேருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இது … Read more
சென்னை: கோயம்பேட்டில் பள்ளி சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை வன்கொடுமை செய்த திமுக பிரமுகரான உளுந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 15 வயது பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திராவைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மாள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட … Read more
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவ நேரத்தில் பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், பந்து அவரது தலைக்கும் கழுத்துக்கும் இடையில் பட்டத்தில் உடனே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவக் குழு ஓடி வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆனால் அங்கு சிகிச்சையின்போது பென் ஆஸ்டினின் உயிர் பிரிந்தது. பென் ஆஸ்டின் (17) துறு துறு இளம் வீரர். 17 … Read more
சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, விரைவில் அமைய உள்ள காஞ்சிபுரம் மற்றும் மதுரை சிப்காட்டுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு, நாட்டிலேயே கல்வி வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களை காட்டிலும் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு … Read more