மகள் திருமணத்திற்கு முந்தைய நாள் தந்தை மரணம்; மறைத்து திருமணம் நடத்திய அண்ணன்; துரை வைகோ உருக்கம்

மறுநாள் சகோதரியின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் முதல்நாள் மாரடைப்பில் தந்தை மறைந்துவிட அந்தத் தகவலை மறைத்து சகோதரிக்கு இளைஞர் ஒருவர் திருமண விழாவை நடத்தியதாக, திருச்சி எம்.பி துரை வைகோ உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். இதுபற்றி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்துள்ள பதிவில், “தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய மரணம்: சிந்திப்போம்! செயல்படுவோம்!. கடந்த சில நாட்களாக என் மனதை ஆழமாகப் பாதித்த ஒரு துயரச் சம்பவத்தையும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களையும் உங்களுடன் … Read more

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர். முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர்  கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது முருகன் கோவில். இந்த கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர்,  செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.  கடல் அலைகளால் இத்தலம் எப்போதும் அலைக்கப்படுவதால் ‘அலைவாய்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள முருகன் ‘செந்தில் … Read more

'மோன்தா' புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?

‘மோன்தா’ புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம். அதன் படி,  வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கே, வடமேற்கே நகர்ந்து நாளை காலை கடும் புயலாக வலுப்பெறும். இதையடுத்து, நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் காக்கிநாடா – மசிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும். மழை … Read more

’மோந்தா’ புயல்: ஒடிசாவில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

புவனேஷ்வர், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் அடுத்த 12 மணி நேரத்தில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் வரும் 28 ஆம் தேதி ஆந்திராவின் காக்கிநாடா கரையைக் கடக்க உள்ளது. புயல் காரணமா ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வங்க கடலோரம் உள்ள மாவட்டங்களில் எச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தாழ்வான … Read more

மருந்து கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மோதல்… சட்டக்கல்லூரி மாணவரின் வயிற்றைக் கிழித்து, விரல்களை வெட்டிய கொடூரம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஜீத் சிங் சந்தல்(வயது 22). இவர் கான்பூர் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மெடிக்கல் கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மருந்தின் விலை குறித்து கடைக்காரர் அமர் சிங்கிற்கும், மாணவர் அபிஜீத் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அமர் சிங்கின் சகோதரர் விஜய் சிங் மற்றும் 2 நண்பர்களான பிரின்ஸ் ராஜ் மற்றும் நிகில் … Read more

பெங்களூரு: சாலையோரம் நின்ற ஆட்டோவில் பெண் சடலம் இருந்ததால் பரபரப்பு – போலீஸ் தீவிர விசாரணை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக்நகர் பகுதியில் நேற்று மாலை வெகு நேரமாக சாலையோரத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் ஏதோ ஒரு பொருள், போர்வையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், ஆட்டோவை சோதனை செய்தபோது, போர்வைக்குள் ஒரு பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். … Read more

அரபிக்கடலில் 11 நாட்களாக சிக்கி தவித்த 31 மீனவர்கள் மீட்பு

மங்களூரு, கோவாவை சேர்ந்த மீன்பிடி படகில் 31 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றது. நடுக்கடலில் மீன்பிடி படகு செயலிழந்ததால் கொந்தளிப்பான அரபிக்கடலில் கடந்த 11 நாட்கள் சிக்கி தவித்தது. மங்களூருவில் இருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகு காணாமல் போனதாக வந்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை கஸ்தூர்பா காந்தி ரோந்து கப்பலையும், கொச்சியில் இருந்து ஒரு டோர்னியர் விமானத்தையும் அனுப்பியது. டோர்னியர் விமானம் மீன்பிடி படகை கண்டறிந்தது தகவல் … Read more

லடாக்கில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

கார்கில், லடாக்கில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.30 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 3.6, On: 26/10/2025 … Read more

"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" – விஜய்யை விமர்சித்த சீமான்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் சொல்ல திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். விஜய் இதுகுறித்து விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், … Read more