புதுச்சேரி: “ரெஸ்டோ பாரில் இளைஞர் உயிரிழக்க காரணம் போலீஸின் மாமூல்தான்'' – அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், “புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ரெஸ்ட்டோ பாரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். புதுச்சேரி ரெஸ்ட்டோ பார்களால் சட்டம் … Read more

நாளை முதல் சென்னையில் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழகத்​தில் முதன்​முறை​யாக நாளை முதல் சென்னையில் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் ரூ.208 கோடி மதிப்​பில் 120 புதிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்​தார். அப்போது,  பேருந்​துகளை மின்​னேற்​றம் செய்​வதற்​கான கட்​டு​மானப் பணி​கள், பராமரிப்​புக் கூடம் உள்​ளிட்ட வசதி​களு​டன் ரூ.47.50 கோடி​யில் மேம்​படுத்​தப்​பட்ட வியாசர்​பாடி மின்​சா​ரப் பேருந்து பணிமனையை​யும் அவர் திறந்து வைத்​தார். இதைத் தொடர்ந்​து, பெரும்​பாக்​கம் … Read more

பெங்களூரு; 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு, பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் இன்று காலை வந்தடைந்த நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த அவர், 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். பெங்களூரு- பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) – புனே ஆகிய வழித்தடங்களில் இந்த ரெயில்கள் இயக்கப்படும் இதேபோல் ஓட்டுனர் இல்லாத … Read more

`கடிதங்கள் எழுதிய அந்த நாள்கள் இனிய நினைவுகளால் நிரம்பியவை' – Post Box குறித்த நெகிழ்ச்சி பகிர்வுகள்

`தபால் பெட்டி சேவை நிறைவு’ 2025 ஜூலை மாதம், இந்திய தபால் துறையின் முக்கியமான அறிவிப்பொன்று செய்திகள் வாயிலாக பரவியது. “மிக விரைவில், பெரும்பாலான தபால் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கப்படவுள்ளன; தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாததால் அவை இனி பயன்படுத்தப்பட மாட்டாது” என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, பலர் மனதில் ஆழமான நினைவுகளையும், ஏக்கங்களையும் கிளப்பியது. ஒரு காலத்தில் இந்த தபால் பெட்டிகள் மூலம் காதலும், குடும்பமும், உறவுகளும் இணையப்பட்டிருந்தன. இந்த கட்டுரையில், தங்கள் … Read more

தமிழ்நாட்டில் 22 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 அரசியல் கட்சிகள் நீக்கம்..!

டெல்லி: நாடு முழுவதும் முழுமையான  அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 22 அரசியல் கட்சிகளும் அடங்கி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகள் தேர்தல் களத்தில் பங்கு பெறாத, மற்றும் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் போது வழங்கிய அலுவகத்தில் இயங்காத அரசியல் கட்சியை அடையாளம் கண்டு அதன் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  தேர்தலில் … Read more

காஷ்மீரில் 10-வது நாளாக தேடுதல் வேட்டை; பயங்கரவாதி பலி

ஜம்மு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகால் குல்சன் வன பகுதிகளில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த புலனாய்வு தகவலை தொடர்ந்து அவர்களை தேடும் தீவிர பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஆபரேஷன் அகால் என்ற பெயரிலான இந்த ராணுவ நடவடிக்கை பணியானது, கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. அப்போது, ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். சமீப ஆண்டுகளில் மிக நீண்டகால ராணுவ தேடுதல் நடவடிக்கையாக … Read more

கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்' – என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை கவின்குமாரின் ஆணவக் கொலை சம்பவம் நிகழ்ந்தும், தமிழக காவல்துறை ‘பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்’ என அலட்சியம் காட்டுவதாகக் குமுறுகின்றனர் கிராம மக்கள். சமீபத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்குமார் கல்பட்டி கிராமத்தில் மொத்தமுள்ள 300 குடும்பங்களில், 20-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகக் … Read more

போலி வாக்காளர்களைச் சேர்த்ததற்காக மேற்கு வங்க அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

கொல்கத்தா: போலி வாக்காளர்களைச் சேர்த்ததற்காக மேற்கு வங்க அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட  நான்கு மேற்கு வங்க சிவில் சர்வீஸ் (WBCS) அதிகாரிகள் மீது இந்திய தேர்தல் ஆணையம் (EC) கடுமையான நடவடிக்கை  எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் 4 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் உள்பட கள்ள … Read more

டிரம்பின் வரிவிதிப்பு அழுத்தம்: ‘மோடி அரசுக்கு மக்களின் ஆதரவு அவசியம்’- சரத் பவார்

மும்பை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) தலைவர் சரத்பவார், “இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பது ஒரு அழுத்தம் தரும் தந்திரம். நாட்டின் நலன்களை பாதுகாக்க இந்திய மக்களாகிய நாம் அரசை ஆதரிக்க வேண்டும். பிரதமர் மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துவிட்டதா என்று யூகிக்க விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் … Read more

ரோலெக்ஸ் நிறுவனர் ஹான்ஸ், ஹிட்லரின் உளவாளியா? – வெளியானஅறிக்கை; இங்கிலாந்தில் அதிர்ச்சி!

பிரபல ரோலக்ஸ் கடிகார பிராண்டின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப், ஹிட்லரின் ஆட்சிக்கு ஆதரவு கொண்டிருந்ததாகவும் நாஜி உளவாளியாக இருந்ததாகவும் தி டெலிகிராஃப் அறிக்கை கூறுகிறது. பிரபலங்கள் தொடங்கி பணக்காரர்கள் என அனைவரும் விரும்பும் ஒரு ஆடம்பர கடிகார பிராண்டாக ரோலக்ஸ் உள்ளது. இந்த கடிகாரத்தின் தனித்தன்மை காரணமாக பலரும் இதனை வாங்க விரும்புகின்றனர். இந்த ரோலக்ஸ் பிராண்டை ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் என்பவர் உருவாக்கினார். ரோலக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக நீர்ப்புகா தன்மைக்கொண்ட வாட்ச்கள் இடம்பெறுகின்றன. ரோலக்ஸ் … Read more