தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள்! அமைச்சர் சிவச

சென்னை:  தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு “தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன”  என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், அக்.17 அன்று, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். மேலும், பேருந்தினை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்தினை … Read more

"காசிக்குப் போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆகணும்" – ராமநாதர் கோவிலில் ரிஷப் ஷெட்டி!

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு காசிக்குப் பயணம் செய்த ரிஷப் ஷெட்டி, அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்துக்கு வருகை தந்துள்ளார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காசிக்குப் போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆகணும். காந்தாரா படமே ஈஸ்வருடடைய ஒரு கணத்தைப் பற்றி, காவல் தெய்வத்தைப் பற்றி எடுத்தது. படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ராமேஸ்வரத்தில் ரிஷப் ஷெட்டி அதில் பார்வையாளர்களின் பங்கு எவ்வளவு இருக்கோ, அதே அளவு பார்வையாளர்களிடம் … Read more

உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: உலகப் புத்தொழில் மாநாடு  மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டு உள்ளதாக  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகரில் தொடங்கி வைத்த உலகப் புத்தொழில் மாநாடு – 2025 மகத்தான வெற்றி பெற்றுள்ளது, இதன் மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் ஈ;ரக்கப்பட்டு உள்ளது  என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகப் புத்தொழில் மாநாடு 2025-ஐ கோயம்புத்தூரில் … Read more

தலைக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை … Read more

தவெக: விரைவில் கரூர் பயணம்? – விஜய் கொடுத்த அப்டேட்!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலா 20 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் அந்தக் கட்சியின் தலைவர் விஜய். கரூர் விஜய் பிரசாரம் அதன்படி இன்று 39 பேரின் குடும்பத்தினருக்கு வங்கிக்கணக்கில் 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2 லட்சம் விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விஜய் சார்பாக வழங்கப்பட்ட கடிதத்தில் விரைவில் அவர் கரூர் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது, “கரூரில் … Read more

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து எங்கள் விவாதங்கள் நடைபெற்றன. நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது ஒத்துழைப்பு மகத்தானது என குறிப்பிட்டு உள்ளார். மூன்று நாள்  அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி … Read more

டெல்லி: எம்.பி.க்களுக்கான குடியிருப்பில் திடீர் தீ விபத்து

புதுடெல்லி, டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 14-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கட்டிட வளாகத்தின் மேல் தளத்தின் வெளிப்புறத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என டெல்லி தீயணைப்பு … Read more

தண்டவாள பராமரிப்பு: அக்.20 முதல் 24ந்தேதி வரை அதிகாலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம்…

 சென்னை: தண்டவாள பராமரிப்பு  பணி காரணமாக  அக்.20 முதல் 24ந்தேதி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் வழக்கமான நேர இடைவெளியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன்ம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை … Read more

ஒரே முகவரியில் சமந்தா, தமன்னா…பரபரப்பை கிளப்பிய வாக்காளர் பட்டியல்

ஐதராபாத், சமந்தா, தமன்னா உள்ளிட்ட நடிகைகள் ஒரே முகவரியில் வசிப்பது போன்ற போலி வாக்காளர் பட்டியல் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்காளர் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா, ரகுல் பிரீத் உள்ளிட்ட சினிமா நடிகைகளின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. விசாரணையில் புகைப்படங்கள் மற்றும் இபிஐசி(EPIC) எண்கள் மாற்றப்பட்டு, அந்த பட்டியல் போலியாக வெளியிடப்பட்டது … Read more