“திமுக-வில் பாதி பேர் தமிழர்களே அல்ல; பிரதமர் விமர்சனம் தமிழர்கள் மீது அல்ல" – தமிழிசை செளந்தரராஜன்

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பீகாரை மையமிட்டு வலம் வருகின்றனர். பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் பிரசாரத்தில், “பீகார் மக்களின் உழைப்பால்தான் துபாயில் வானுயர கட்டடங்கள் எழுந்தது. ஆனால், இந்த மண்ணின் மக்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பு இல்லை. அதனால்தான் பல மாநிலங்களுக்கு பீகார் மக்கள் வேலை தேடிச் செல்கிறார்கள்” என்றார். மு.க ஸ்டாலின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக … Read more

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சபரிமலையில் நடைபெறும் புகழ்பெற்ற மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க செல்வதால், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு பேருநது  சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துஉள்ளது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள  அய்யப்பன் கோவில் நடைபெறும்   மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வருகிறது. இது … Read more

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.! | Automobile Tamilan

நாட்டின் முதன்மையான ஸ்கூட்டரான ஹோண்டாவின் ஆக்டிவா வெற்றிகரமான 24 ஆண்டுகளில் சுமார் 3.5 கோடி விற்பனை இலக்கை கடந்து இந்தியாவின் மிகவும் நம்பகமான, அதிகம் விரும்பும் ஸ்கூட்டர்களில் தொடர்ந்து முதன்மையாக விளங்கி வருகின்றது. 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா தொடர்ந்து பல்வேறு மாறுதல்களை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது எலக்ட்ரிக் வகையிலும் ஆக்டிவா e: விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக 1 கோடி ஆக்டிவா வாடிக்கையாளர்களை … Read more

'தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் மோடிக்கு விளக்குவார்கள்'- எம்.பி கனிமொழி கண்டனம்

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்.பி கனிமொழியும் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி “வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு … Read more

ராம்நார் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்ட பிரிகேட் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் தளத்திற்குள்  கட்டிடங்கள் கட்ட விதிகளை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பகுதியில் கட்டிடம்  பிரிகேடு கட்டுமான நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. பள்ளிக்காரனை  ராம்சார் நிலத்தை பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை  மற்றும்  பெருநகர சென்னை வளர்ச்சி குழுமமும்  விதிகளை மீறி பிரபல கட்டுமான நிறுவனமான பிரிகேட் … Read more

மதுரை: "நான் எப்படி டீல் செய்வேன் என்பது சீனியர் லீடர்களுக்கு தெரியும்" – சசிகலா சூசகம்!

“அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும்” என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா தேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த வி.கே.சசிகலா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, திமுக அரசை அகற்றினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். … Read more

கோவையில் 20.72 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி  உள்ளது. இந்த மைதானம்,  பொது-தனியார் பங்களிப்பு முறையில்  செயல்படுத்தப்பட உள்ளது. இதில்,  சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் இருக்கைகள்  அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து … Read more

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்; இமாசல பிரதேச மந்திரி

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்ற இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-20 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரில் வளர்ச்சிக்கான அறிகுறியே இல்லை. பீகாரில் 64 சதவீத மக்கள், நாள் ஒன்றுக்கு 66 ரூபாயுடன் வாழ்ந்து வருவதாக வெளியான புள்ளிவிவரமே அதற்கு சாட்சி. நல்லது நடக்க மாற்றம் அவசியம். இமாசலபிரதேசத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதால், ஓய்வூதிய … Read more

BB Tamil 9 Day 25: 'லவ் டார்ச்சர் பண்றான்…' – அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும்கூட ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர் திவாகர். கூடவே நிறைய சண்டையும் போடுகிறார். இம்மாதிரியான காரியக் காரர்களை பிரபலமாக ஆக்குவது நம்முடைய ரசனையின் பாதாள வீழ்ச்சி. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 25 பிக் பாஸ் வீடு தாங்கள் வென்ற பொருட்களை பங்கு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க “நமக்கு ஒரு முறுக்கு கூட … Read more

திமுகவின் ‘பி டீம்’ ஆக செயல்பட்ட துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக தோற்றது! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட சில அதிமுக  துரோகிகளால்தான் கடந்த தேர்தலில்  அதிமுக தோல்வியை சந்தித்தது என அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி   ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். தேவர் திருமகன் குருபூஜைக்கு ஒன்றாக சென்ற, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன், மற்றும் எடப்பாடி மீதான அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் ஆகியோர், எடப்பாடியை நீக்கும் வரை ஓயமாட்டோம் என சூளுரைத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more