இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று  இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் . பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மாலை கேரள மாநில தலைவர் திருவனந்தபுரம் வருகை தந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இன்று இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார். அவரது ஆன்மீக வருகை இந்தியாவின் மத மரபுகள் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையை எடுத்துக்காட்டுகிறது. குடியரசு தலைவர் சபரிமலை செல்வதற்காக இன்று காலை … Read more

சபரிமலை: ஜனாதிபதி திரெளபதி முர்மு சுவாமி தரிசனம்; கருப்பு உடையில் இருமுடி செலுத்தி வழிபாடு

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். இரவு ராஜ்பவனில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்றார். அங்கிருந்து கார் மூலம் பம்பா சென்றடைந்தார். பம்பா விநாயகர் கோயிலில் வழிபட்டதுடன், அங்கு இருமுடி நிறைத்தார். ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டினார்கள். பம்பாவில் இருந்து பிரத்யேக வாகனத்தில் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக … Read more

தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு! விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்..

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார்  2லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி உள்ளன. இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசை பாமக தலைவர்  அன்புமணி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, டிசம்பர் கடைசி வரையில் மழைக்காலம் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலம் ஆகும். மாநிலத்தின் ஆண்டு சராசரி மழையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதை மெய்ப்பிக்கும் … Read more

BB Tamil 9: ”உனக்காக என்ன பேசியிருக்கேன்'னு எனக்கு தெரியும்’ – மோதிக்கொள்ளும் பார்வதி, திவாகர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர். BB Tamil 9 கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் … Read more

பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 40 படகுகளுடன் 900 தீயணைப்பு வீரர்கள் தயார்…!

சென்னை;  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,  பருவமழையை எதிர்கொள்ள சென்னையில்  900 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 படகுகள்  தயார் நிலை யில் உள்ளதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காதவாறு ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக திமுக அரசு கூறினாலும், பல பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்குவது தொடர்கிறது. இதன் காரணமாக, மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற மாநகராட்சி 300க்கும் மேற்பட்ட நீர் இறைப்பு இயந்திரங்களை … Read more

BB Tamil 9 Day 16: `ஏதாச்சும் பண்ணுங்க பாஸ்' – பாரு, வியன்னாவின் போர்கொடி

வீடு பெருக்கும் ஒரு சிறிய வேலையைக்கூட செய்யாமல் முரண்டு பிடித்து அதற்காக ஒரு மணி நேரம் சண்டை போடுவது ஒவ்வொரு சீசனிலும் நடக்கிறது. இந்த எபிசோடை அதன் உச்சம் எனலாம்.  இது பிக் பாஸ் வீடுகளில் மட்டுமல்ல. ஏறத்தாழ பெரும்பான்மையோரின் வீடுகளில் பார்க்கலாம். பெற்றோர்க்கு ஒரு சிறிய உதவியைக் கூட செய்யாமல் முரண்டு பிடித்து செல்போனில் மூழ்கியிருக்கும் பிள்ளைகள் பலர்.  தான் தங்கியிருக்கும் இடத்தை தன்னுடைய வீடாக நினைத்தால்தான் சுத்தம் செய்யும் ஆர்வம் தன்னாலேயே வரும்.  BB … Read more

திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா ..!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன்  இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.  கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27 மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே … Read more

மகளை அறிமுகப்படுத்திய தீபிகா – ரன்வீர் தம்பதி; வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகர்ந்துள்ளனர். செப்டம்பர் 2024-ல் துவா பிறந்தார். தீபிகா படுகோன் அவ்வப்போது துவா மடியில் இருப்பதைப்போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். ஆனால் துவாவின் முகத்தை சமூக வலைதளங்களில் காட்டவில்லை. View this post on Instagram A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone) sara: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் … Read more

கனமழை: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை  காரணமாக  இன்று (22.10.2025)  பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன. பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 19  மாவட்டங்கள் செங்கல்பட்டு திருவள்ளூர் கடலூர் விழுப்புரம் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் சிவகங்கை காஞ்சிபுரம் திருச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: சென்னை புதுக்கோட்டை சேலம் பெரம்பலூர் நாமக்கல் திருப்பூர் கரூர் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் வானிலை மற்றும் நீர்நிலைகளின் … Read more

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, Rain இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர், … Read more