“மாஸ்க் போடு, குரங்கைக் கண்டு பிடி!” குரங்கு சாகசத்தால் மிசிசிப்பி மக்கள் அலறல்…

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த ஒரு விபத்து இப்போது “Breaking News”-ஆக மாறியுள்ளது. துலேன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து ரீசஸ் குரங்குகள் ஏற்றிச் சென்ற லாரி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த “அறிவியல் ஆராய்ச்சி ஹீரோக்கள்” — சாட்சாத் ரீசஸ் குரங்குகள் தான் — அவை அடைத்து வைக்கப்பட்ட கூண்டுகள் உடைந்ததால் கிடைத்த கேப்பில் எஸ்கேப் ஆகியுள்ளன. 1948ல் அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பிய முதல் குரங்கும் ரீசஸ் தான் — ஆல்பர்ட் II அந்த … Read more

Selvaraghavan: “அதை பார்த்துக்க எனக்கு பொறுமை இல்ல!" – செல்வராகவன் பேட்டி

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் இயக்குநர் செல்வராகவனும் முக்கியமானதொரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக அவரைச் சந்தித்து சினிமா விகடன் யூட்யூப் தளத்திற்கு பேட்டி கண்டோம். நடிகராகவும், இயக்குநராகவும் பல்வேறு விஷயங்களை அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்டார். Aaryan Movie Press Meet செல்வராகவன் பேசும்போது, “நடிப்புக்காக நான் எதுவும் பண்ணமாட்டேங்க. அதுவாக வரணும். படத்தை இயக்கும்போது வசனங்கள் மூலமாக எமோஷனை சொல்ல வேண்டிய டாஸ்க் இருக்கும். … Read more

நகராட்சி துறையில் அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல்! தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலம்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக என்ஐஏ தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல பத்திரிகையான  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அமைச்சர் கே.என்.நேரு பதவி வகிக்கும் நகராட்சி நிர்வாகத்துறையில்  ஒரு அரசு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாக பணம் (Cash for job Scam) பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது தமிழ்நாடு அரசு … Read more

மீண்டும் மீண்டும்; கோவை அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி – வனத்துறை விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஜக்கனாரி பகுதியில் வனப்பகுதி அருகே திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. வன எல்லையை ஒட்டியுள்ள அந்தத் தோட்டத்தின் அருகிலேயே வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழியும் உள்ளது. யானை அங்கு சுமார் 15 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்திருந்தது. மேலும் அகழியை ஒட்டி மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் யானை மின்வேலியில் … Read more

திமுக ஆட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” – சிபிஐ விசாரணை! ரூ.888 கோடி ஊழல் குறித்து எடப்பாடி உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்…

சென்னை: திமுக அட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்”  என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி,  அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேரடி நியமனம் மூலம்  … Read more

Chennai Hunter Nights Ride – மறக்க முடியாத ஒரு ஹன்ட்டர் 350 ரைடு; மறக்க முடியாத அனுபவம்

சென்னை அடையாரில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவன ஸ்டோரிலிருந்து இந்த ரைடு ஆரம்பமானது. மாலையில் Hi-Tea மற்றும் Snacks உடன் எல்லோரும் சேர்ந்து, சிரிப்பு, உரையாடல், புது முகங்கள் – சந்தோஷமான தொடக்கம். ராயல் என்ஃபீல்டு டீம் ரைடர்களை சிம்பிளாகவும், உற்சாகமாகவும் வரவேற்றது. அதுக்கப்புறம் இன்ஜின் ஸ்டார்ட்! எல்லோரும் சேர்ந்து ECR ஸ்பீட்வே நோக்கி ஹன்ட்டர் 350-ஐ ஓட்டியபடி கிளம்பினோம். சென்னையின் இரவு சாலைகள், விளக்குகள், சற்றே குறைந்துபோன டிராஃபிக் – அந்த ரைட் அனுபவமே வேறு … Read more

அரசு பணி வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி! நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி என  ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தமிழ்நாடு  நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்  அளித்துள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு இரண்டு இலட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து, 1 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதியாக 2,538 பணியாளர்கள்   பணியமர்த்தப்பட்டு, சிறப்பாகப் பணிபுரிந்து வரும் நிலையில், இவ்வாறு களங்கம் … Read more

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் | Automobile Tamilan

2027 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள 0 α (Alpha) என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை ஜப்பான் மொபிலிட்டி கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக ஹோண்டாவின் இந்திய அதிகாரி எலக்ட்ரிக் மாடல் குறித்து உறுதிப்படுத்தியிருந்தார். ஹோண்டா தனது மின்சார கார்களுக்கான வரிசை 0 சீரிஸ் கான்செப்ட் என்றே வரிசைப்படுத்தி வரும் நிலையில் முதல் உற்பத்தியை அடைய உள்ள காருக்கு தற்பொழுது 0 α (ஆல்பா) … Read more

`குண்டர் சட்டம் பாய்ந்தது!' – பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்; ஓராண்டு சிறைக்காவல்

ஆந்திராவைச் சேர்ந்த திருமணம் ஆகாத 25 வயது இளம் பெண் தன்னுடைய வளர்ப்புத் தாயிடம், `திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் சென்று வழிபட வேண்டும்’ என்று சொல்ல, தாயும் மகளும் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இரவு, ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். நெல்லூரிலிருந்து வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு, திருவண்ணாமலை கீழ் அணைக்கரைப் பகுதியிலிருக்கும் மொத்த வியாபாரக் காய்கறி மார்க்கெட்டுக்குப் புறப்பட்ட மினி லாரியில் அவர்கள் பயணித்திருக்கின்றனர். அந்த வளர்ப்புத் தாயின் தம்பிதான் லாரியை ஓட்டி வந்திருக்கிறார். செப்.30-ம் … Read more