"விருதுகள் என்பது போட்டியை ஏற்படுத்த அல்ல" – 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்ற மம்மூட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் ‘பிரம்மயுகம்’ படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ விருதைப் பெற்றுள்ளார். இதையடுத்து வாழ்த்துத் தெரிவித்து மம்மூட்டியின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்மூட்டி, “என்னோட சேர்ந்து நிறைய இளம் நடிகர்களும் விருதுகளை வென்றிருக்கின்றனர். அவர்களோட சேர்ந்து நானும் விருது பெற்றிருப்பதில் மகிழ்ச்சி, நானும் இளமையாகவே உணர்கிறேன். இளம் நடிகர்களோடு போட்டியாக இல்லை, சேர்ந்து பயணிக்கிறேன் என்பதே … Read more

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம் அறிவிக்கப்பட்டபடி தொடங்கும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது நாடு போலி வாக்குகளை நீக்கும் வகையில்,  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. ஏற்கனவே பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை … Read more

"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது" -அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு பணி நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு கே.என்.நேரு, “நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. … Read more

கரூர் சம்பவம்: 306 பேருக்கு சம்மன் – பனையூரில் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை…

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளதுடன், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர்  மாதம் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாறுபட்ட … Read more

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம் | Automobile Tamilan

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் பிரசத்தி பெற்ற எலிவேட் எஸ்யூவிக்கு தொடர்ந்து பல்வேறு சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் ஆக்செரீஸ் சார்ந்த ஸ்டைலிங் மேம்பாடுகளை வழங்கி வரும் இந்நிறுவனம் எலிவேட் ADV எடிசன் என்ற பெயரில் ரூ.15,29,000 முதல் ரூ.16,66,800 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்துள்ளது. ஹோண்டா Elevate ADV எடிசன் சிறப்புகள் என்ன ? குறிப்பாக ஆரஞ்ச் நிறத்தை விரும்புவோவருக்கு ஏற்ற தேர்வாக அமைந்து ஸ்போர்ட்டிவ் லைஃப்ஸ்டைல் விரும்பிகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த … Read more

"பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது; அமெரிக்காவும் சோதிக்கும்" – ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுவருவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக எழுந்துள்ளது. அமெரிக்க அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாக்காக இந்த கருத்தை அவர் கூறுவதாக விமர்சிக்கப்படுகிறது. அணு ஆயுத சோதனை சிபிஎஸ் நியூஸுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாகவும் ஆனால் … Read more

தெருநாய் விவகாரம்: தமிழ்நாடு தலைமைச்செயலாளர் ஆஜர் – பொதுஇடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம்,  பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக  கூறி உள்ளது. தெரு நாய் தொல்லை விவகாரத்தை சு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் … Read more

ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறது. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. இந்த நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ஐ.சி.சி சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கும் பரிசுத்தொகை மட்டுமின்றி, பி.சி.சி.ஐ தனியாக ஐ.சி.சி-யை விட அதிக பரிசுத்தொகையை இந்திய மகளிர் அணிக்கு அறிவித்திருக்கிறது. … Read more

பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்! தமிழ்நாடு அரசு

சென்னை: பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்  நவ.6-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கரூர் தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை, ரோடு ஷோ வின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து,  அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டி … Read more