கோவை மாணவி வன்கொடுமை சம்பவம் -நள்ளிரவில் காலில் சுட்டு பிடிக்கப்பட்ட 3 பேர்! கோவை போலீஸ் கமிஷனர் விளக்கம்…

கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை சுட்டு பிடித்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக இந்த கொடூரமான சம்பவத்தை கண்டித்து,  அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடியதுடன், நேற்றே பாஜகவினர்   தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தினர். மேலும் நாம் தமிழர் கட்சியினர் சம்பவம் நடைபெற்ற பகுதி அருகே உள்ள டாஸ்மாக் பாரை அடித்துநொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகே,  பாலியல் வன்கொடுமை … Read more

“2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" – வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று முன்தினம் (நவம்பர் 2) முடிந்த முடிந்த ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியது. இதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் இந்திய மகளிர் அணிக்கு ரூ. 51 கோடி பரிசுத்தொகை அறிவித்திருக்கிறது. Mithali Raj – மிதாலி ராஜ் இதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ஐ.சி.சி சார்பில் சுமார் ரூ. 40 … Read more

சென்னையில் 5 தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னை:  சட்டவிரோத பண  பரிவர்த்தனை புகாரின் பேரில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெற்று வரும் இடங்களுக்கு சொந்தக்காரர்கள், தலைமுடியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை நடத்துபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில்  இன்று அதிகாலை 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி,   அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(நவ. 4) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை … Read more

TVK : 'கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் வரும் விஜய்!' – சிறப்புப் பொதுக்குழுவின் திட்டம் என்ன?

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக வெளியில் வந்து நிர்வாகிகள் மத்தியில் பேசவிருக்கிறார் விஜய். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவதோடு அரசியல்ரீதியாக நிறைய செய்திகளை கடத்தக் கூடியதாகவும் இந்த நிகழ்வு இருக்கும் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். TVK Vijay கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதமாக எந்த செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருந்தார் விஜய். வழக்கமாக எல்லா பிரச்னைகளுக்கும் அறிக்கை … Read more

அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைச்சர் கேஎன் நேரு படத்துடன் ஊழல் பேனர்! போலீசார் அகற்ற முயற்சித்ததால் சலசலப்பு…

சென்னை:  ராயப்பேட்டை  அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைச்சர் கேஎன் நேரு படத்துடன் , நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்  குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை  போலீசார் அகற்ற முயற்சித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் காவல்துறையினருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மக்கள் கூட்டம் கூடியது. இதையடுத்து, காவல்துறையினர் பேனரை  அகற்றுவதை விட்டுவிட்டு சென்றனர். அமைச்சர் நேருவின் கீழ் உள்ள நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில், 2,538 பணி நியமனத்தில், ஒரு வேலைக்கு 25 லட்சம் … Read more

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய தலைமுறை 2026 வென்யூ N-Line இந்திய காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் சற்று ஸ்போர்ட்டிவான அனுபவத்தை வழங்கும் நோக்கில் ரூ.10.55 லட்சம் முதல் ரூ.15.48 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  மேம்பட்ட பாதுகாப்பு, ஸ்டைலிஷ் டிசைன், ADAS Level 2 டெக் ஆகியவை போட்டியாளர்களிம் இருந்து தனித்துவமாக்குகின்றன. ஹூண்டாய் Venue N-line விலை விவரம் இந்த வெயூ என்-லைனில் N6, N10 என இரு வேரியண்டுகளின் அடிப்படையில் மாடல்கள் வழங்கப்பட்டுள்ளது. Variant … Read more

வீட்டு வாசலில் விமானம், தெருவே ரன்வே! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமெரிக்க நகரம்

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே விமானம் இருக்கும், தெருக்கள்தான் இங்கு விமான ஓடுதளங்கள்…. படிக்கவே ஆச்சரியமாக உள்ளதா? இந்த நகரம் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள ‘கேமரூன் ஏர்பார்க்’ என்ற இந்த நகரம் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவின்படி, கார்களுக்குப் பதிலாக விமானங்கள் நிறைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி காட்சியளிக்கிறது. cameron airpark வைரலாகும் வீடியோவில், வீடுகளுக்கு … Read more

தமிழகத்தில் தொடங்கியது வீடு வீடாக வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தப்பணி…

சென்னை: தமிழ்நாட்டில் 2025 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை  (SIR) தொடங்கியது. அதன்படி வீடு வீடாக சென்று பணிகளை பிஎல்ஓக்கள்  (BLO  பூத் லெவல் ஆபீசர்  -Booth Level Officer) மேற்கொண்டு உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களையவும், போலி வாக்காளர்களை (இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், போலி வாக்குகள்) நீக்கவும், … Read more

“அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" – CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலித் மற்றும் முதல் பௌத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்து வந்த புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு கடிவாளம் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் இவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு இவர் தலைமையிலான அமர்வுதான், மாநில அரசுகள் கொண்டுவரும் மசோதாக்கள் மீது … Read more

வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களுடன் தாக்குதல் – பரபரப்பு

சேலம்: வாழப்பாடி அருகே காரில் சென்றுகொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அன்புமணி ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் இன்று கைகலப்பாக மாறி உள்ளது. பாமகவில் அன்புமணியை நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தான் பாமக தலைவர், எனக்கே  கட்சியினர் ஆதரவு உள்ளது என தனி … Read more