"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" – ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார். அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே அவரது குடும்பம் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தாவாலா மிட்டாய் கடையில்தான் இனிப்புகள் வாங்குவது வழக்கம். அதனால் ராகுல் காந்தி சந்தாவாலா மிட்டாய் கடையில் இருந்தவர்களிடம் மிகவும் உரிமையுடன் பேசினார். இனிப்புகள் செய்யும் இடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி … Read more

‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர்! துாய்மை பணியாளர்களை தேடி தேடி கைது செய்த காவல்துறை…

சென்னை:   தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த சென்னை மாநகராட்சி மற்றும் திமுக அரசுக்கு எதிராக,  ‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவை தவிர 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாரிடம் சென்னை மாநகராட்சி … Read more

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா – அநீதியைப் பழிவாங்கியுள்ளது! பிரதமர் மோடி கடிதம்..

டில்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  இந்தியா  அநீதியை பழிவாங்கி உள்ளது  என்றும்  தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ராமர் நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்த்துப் போராடவும் தைரியம் அளித்துள்ளார். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை கடந்த மாதம் … Read more

அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வெதர்மேன் தகவல்…

சென்னை: அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், அது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு  வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவும் இந்த மாத இறுதியில் கனமழை பெய்யும் என கூறியுள்ளார். தற்போது வங்கக்கடலில் தமிழக கடற்கரைக்கு அருகில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று  ‘தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இமழைக்கு வாய்ப்புள்ளது.உஅடுத்த … Read more

"இந்து அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்களின் காலை உடையுங்கள்" – பாஜக Ex. MP பேச்சால் சர்ச்சை

மத்திய பிரதேசம் மாநிலத்தின், முன்னாள் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர் பெற்றோர்கள், தங்கள் மகள்கள் இந்து அல்லாதோர் வீடுகளுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் மீறினால் அவர்களின் காலை உடைக்க வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். இந்த மாத தொடக்கத்தில் போபாலில் ஆன்மிக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பிரக்யா, பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் பிள்ளைகளுக்கு ‘உடல்ரீதியான’ தண்டனைகளை வழங்க வேண்டும் எனக் கூறினார். Pragya singh Thakur “உங்கள் … Read more

தீபாவளி பண்டிகை: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்கள் வெடித்த வெடிகளால்,  சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டை விட குறைவு என்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்று மாசு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் நேற்று (அக். 20ந்தேதி) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதுபோல தமிழகத்திலும்  இந்த ஆண்டு வழக்கமானதை விட  மிகவும் உற்சாகத்துடன் தீபாவளியை மக்கள் கொண்டாடினர்.  சென்னை உள்பட … Read more

குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி. நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, நடைபாதை, பொதுக்கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர் மேலும், இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு அளவிற்கு அதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தப்படுவதால், சுவாசப் பிரச்னைகள், சரும பாதிப்புகள், தைராய்டு சுரப்பி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு … Read more

பருவமழை காலம்: அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மழைக்காலங்களில் மின்வாரியம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் பகிர்வுப் பெட்டிகள் மற்றும் மின் இணைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதைத் தொடாமல் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் மின்கம்பங்களுக்கு அருகில் விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என கூறி … Read more