“அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" – CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலித் மற்றும் முதல் பௌத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்து வந்த புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு கடிவாளம் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் இவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு இவர் தலைமையிலான அமர்வுதான், மாநில அரசுகள் கொண்டுவரும் மசோதாக்கள் மீது … Read more

வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களுடன் தாக்குதல் – பரபரப்பு

சேலம்: வாழப்பாடி அருகே காரில் சென்றுகொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அன்புமணி ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் இன்று கைகலப்பாக மாறி உள்ளது. பாமகவில் அன்புமணியை நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தான் பாமக தலைவர், எனக்கே  கட்சியினர் ஆதரவு உள்ளது என தனி … Read more

தெலுங்கானா கோர விபத்து: 3 சகோதரிகள் பலியான பரிதாபம் – சோகமான திருமண வீடு

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை அரசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 20 பேர் பலியான நிலையில், அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்று தெரிய வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். அவர்களில் … Read more

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது | Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் நீண்ட காலமாக உற்பத்தியில் உள்ள புல்லட் பைக்கின் சக்திவாய்ந்த புல்லட் 650 அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு டிசம்பர் அல்லது ஜனவரி 2026ல் வெளியாக உள்ளது. Royal Enfield புல்லட் 650 சிறப்பம்சங்கள் ராயல் என்ஃபீல்டின் 350cc, 450cc வரிசையை கடந்து 650சிசி பிரிவில் வந்துள்ள மற்றொரு மாடலாக புல்லட் 650 ட்வீன் ஆனது மிகவும் பாரம்பரியமான ரெட்ரோ தோற்றத்தை நினைவுப்படுத்துவதுடன், சிறப்பு வாய்ந்த பாரம்பரிய ராயல் என்ஃபீல்டு லோகோ, கோல்டன் பின் … Read more

கேரள மாநில விருது பெற்ற படங்களை எந்த ஓடிடி-யில் பார்க்கலாம்?

55-வது கேரள மாநில சினிமா விருதுகளின் வெற்றியாளர்கள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான நடுவர்கள் குழு இந்தாண்டுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். கடந்தாண்டு வெளியான படங்களில் 128 மலையாளத் திரைப்படங்கள் விருதுகளுக்கு விண்ணப்பித்திருக்கின்றன. பிரமயுகம் அதில் 26 திரைப்படங்களை இறுதிச் சுற்றுக்கு ஷார்ட்லிஸ்ட் செய்து, இப்போது அதிலிருந்து வெற்றியாளர்களை அறிவித்திருக்கிறார்கள். மஞ்சும்மல் பாய்ஸ், பிரமயுகம் ஆகியத் திரைப்படங்கள் பல பிரிவுகளில் விருது வென்றிருக்கின்றன. எந்தெந்த படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது, அந்தப் படங்களையெல்லாம் எந்த … Read more

திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்து  திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ‘ திமுகவில் ஏற்கனவே 5 துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ள நிலையில் மேலும் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் திருப்பூர் கிழக்கு – இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு கே.ஈஸ்வரசாமி … Read more

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக தி.மு.க. வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

புதுடெல்லி, தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட 49 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை நிறுத்தாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் … Read more

SIR: “நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்" – தமிழிசை விளக்கம்!

தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நேற்று (3-ம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றியபோது: திமுக கூட்டணி வாக்குகளெல்லாம் நீக்கப்படவிருப்பதாகவும், சிறுபான்மையினரின் வாக்குகள் நீக்கப்படவிருப்பதாகவும் திமுக பொய் பிரசாரம் செய்துவருகிறது. வாக்காளரின் வலிமை – புத்தக வெளியீட்டு விழா பீகாரில் 64 லட்சம் … Read more

நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு…

சென்னை:   நாளை (நவம்பர் 5)   தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும்  விஜயின் தமிழக வெற்றிக்கழகம், அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் தொகுதிவாரியாக மக்கள் சந்திப்பு நடத்தினார். ஆனால், திருச்சி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. … Read more

ரூ.16 லட்சம் வீடு வென்ற அதிர்ஷ்ட குழந்தை

நகரி, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமபிரம்மன். இவர் தனக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே அவர் தனது வீட்டை விற்க நூதன முறையை கையாண்டார். அதாவது லாட்டரி சீட்டு போல ரூ.500-க்கு பரிசு கூப்பனை அச்சிட்டு அதனை வினியோகித்தார். அவ்வாறு விற்பனையாகும் கூப்பன்களில் இருந்து ஒரு அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுத்து தனது வீட்டை விற்பனை செய்யவுள்ளதாக அவர் விளம்பர … Read more