SIR: “இதைத் தவிர வேறு வழியில்லை'' – அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? – முழு விவரம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் SIR நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில், இதை விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது தமிழ்நாடு அரசு. இந்தக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், பீகார் மாநில SIR வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் … Read more

Mali: முதல் முறையாக தனிநாட்டைக் கைப்பற்றும் அல்-கொய்தா; ஆப்பிரிக்காவை சூழ்ந்துள்ள ஆபத்து!

அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் முதன்முறையாக ஒரு நாட்டைக் கைப்பற்றி ஆளும் வெற்றியை நெருங்கியிருக்கிறது. வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அதன் இணைப்பு அமைப்பான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் (JNIM) பரந்த பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது. விரைவில் தலைநகர் பமாகோவைக் கைப்பற்றும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அல்-கொய்தாவின் 40 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாட்டைக் கைப்பற்றும் தருணமாக இது இருக்கலாம். அல்-கொய்தாவின் நிழல் அரசு கடந்த சில மாதங்களாக வடக்கு மாலியில் இருந்து தெற்கு நோக்கி … Read more

BB Tamil 9: “இதுதான் ரியலா'' – பார்வதியின் பேப்பரை கிழித்த வைல்ட் கார்ட் சாண்ட்ரா

BB Tamil 9: பிக்பாஸ் சீசன் 9 பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் புதிய 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். இத்தனை நாட்கள் வெளியில் இருந்து போட்டியாளர்களை உள்வாங்கியவர்கள் உள்ளே சென்றதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடத் தொடங்கிவிட்டனர். சாண்ட்ரா – பிரிஜின் புரோமோவில், போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றதற்கான காரணத்தை ஒரு தாளில் எழுதச் சொல்லப்படுகின்றனர். வைல்ட்கார்ட் தம்பதியர்களான பிரஜின் மற்றும் சாண்ட்ரா, போட்டியாளர்கள் எழுதியதை படித்துக்காட்டச் சொல்லி, எல்லோரின் முன்னிலையிலும் கேள்வி எழுப்புகின்றனர். … Read more

பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பணியாற்றிய போது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பல்வீர்சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய ஆய்வாளர் உட்பட 14 போலீஸார்மீது சிபிசிஐடி போலீஸார் நான்கு தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த … Read more

பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் படுகொலை; ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் நள்ளிரவில் கைது

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஜனசுராஜ் கட்சியை சேர்ந்த பியூஷ் பிரியதர்ஷி என்பவர் மொகமா தல் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் கோரி பிரசாரத்தில் ஈடுபடும் … Read more

BB Tamil 9 Day 27: வாட்டர் மெலனை பிழிந்தெடுத்த விசே; ரெண்டு எவிக்‌ஷனா?

மற்ற நாட்களில் போட்டியாளர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும். ஆனால் இந்த விசாரணை நாளில் விஜய்சேதுபதியின் குரல் மட்டுமே கேட்டது. அவர் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.  ஏறத்தாழ அனைவருமே வாங்கிக் கட்டிக் கொள்ளும்போது விதிவிலக்கு ஆச்சரியமாக பாராட்டைப் பெற்றவர் வியன்னா மட்டுமே.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 27 “ஏன் போட்டியாளர்கள் இப்படி மோசமா நடந்துக்கறாங்க?” – இதுதான் பெரும்பான்மையான பார்வையாளர்களின் எரிச்சலுடன் கூடிய கேள்வி. இந்த நோக்கில்தான் நானும் கூட … Read more

தெருநாய்த்தொல்லை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

புதுடெல்லி, தெருநாய்த்தொல்லை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய்த்தொல்லை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் இந்திரா, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் 72 விலங்குகள் காப்பகங்கள் 22 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டு உள்ளது. … Read more

முதல்வர் பதவி வாய்ப்பை யாராவது விடுவார்களா? பிக்பாக்கெட் அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள்

“எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக பிறந்தவர் செங்கோட்டையன் என்ற ஒரு தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் பெற்று இறைவன் அருளால் முதலமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் “திமுகவின் பி டீம் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார், அதிமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துரோகி டிடிவி தினகரன் சொல்வதற்கெல்லாம் … Read more

ஆபரேஷன் சிந்தூரின்போது அப்பாவி பொதுமக்களை குறிவைக்கவில்லை-ராணுவ தளபதி தகவல்

போபால், மத்திய பிரதேசத்தின் ரெவா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து விவரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்தது. ஏனெனில் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமையுடன் அது நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்களையோ பாகிஸ்தானின் ராணுவ நிலைகளையோ குறிவைக்கவில்லை’ என தெரிவித்தார். அதேநேரம் வெறும் பயங்கரவாத நிலைகளை மட்டுமே இந்தியா … Read more

`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு விடுத்திருந்தார். ஷாருக்கானுக்கு மும்பை அருகில் உள்ள அலிபாக் கடற்கரையில் பண்ணை வீடு இருக்கிறது. அந்த பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதை விட படகில் செல்வதுதான் வசதியாக இருக்கும். எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இயக்குநர் பராகான், கரண் ஜோகர், நடிகை ராணி முகர்ஜி, … Read more