பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: நவ.6-ல் நடக்கிறது 

சென்னை: தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்பது குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் பங்கேற்​கு​மாறு அரசி​யல் கட்​சிகளுக்கு தலை​மைச் செயலர் அழைப்பு விடுத்​துள்​ளார். கரூரில் கடந்த செப்​.27-ம் தேதிதவெக தலை​வர் விஜய் பங்கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, … Read more

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து

சென்னை: ‘​வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி​களை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​தி​னால் பயனில்​லை’ என மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறியது: திமுக மீது எப்​போதெல்​லாம் ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் வரு​கிறதோ, அப்​போதெல்​லாம் அதை திசை திருப்​புவதற்​காக பல்​வேறு விஷ​யங்களைக் கையில் எடுப்​பது வாடிக்​கை​யாக இருக்​கிறது. அப்​படித்​தான் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத் திட்​டத்தை கையில் எடுத்​துள்​ளனர். அந்​தக்கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, 75 லட்​சம் போலி … Read more

திமுகவில் மட்டுமல்ல.. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது – செங்கோட்டையன் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

KA Sengottaiyan About ADMK Family Politics: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் குடும்ப அரசியல் உள்ளது என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். 

“வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை நீக்கியிருக்க வேண்டும்” – ஹெச்.ராஜா

மதுரை: வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த இயக்கம் செய்த பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியில் பொது மக்களுக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”கடந்த 35 ஆண்டு காலமாக மாவட்ட தலைவர் தொடங்கி முக்கிய தலைமை பொறுப்புகளை முழு சுதந்திரத்துடன் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.  

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நடைமுறைப்படுத்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவ.2-ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது … Read more

பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்துக்கு உடனே விண்ணப்பிக்கவும்.  

மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை வசம் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று எழுதிய கடிதத்தில், ‘நவ.3-ம் தேதி (இன்று) நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கையும், … Read more

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நாளை தொடக்கம்! முக்கிய தகவல்

Tamil Nadu : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நாளை தொடங்க உள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம்: தமிழகம் தழுவிய பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (நவ.4) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது குறித்து கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த 19 வயது கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி என்றுதான் கூற வேண்டும். 2013ம் ஆண்டு … Read more