டெல்டாவில் பாதித்த குறுவை நெற்பயிர்கள் குறித்து விரைந்து கணக்கெடுப்பு: அமைச்சர் தகவல்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாகை மாவட்டத்தில் கருவேலங்கடை, கீழ்வேளுர் வட்டம் சின்னதும்பூர், திருக்குவளை வட்டம் திருவாய்மூர், திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டை விட … Read more

AI, டிஜிட்டல் மார்க்கெட்டிங்… தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி – முன்பதிவு செய்வது எப்படி?

AI and Digital Marketing Training: செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (Digital Marketing) மூன்று நாள் பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு 9,500 கன அடியாக அதிகரிப்பு!

பூண்டி: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரிப்பால், சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், பிச்சாட்டூர் அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் நீர் வரத்து தொடங்கியதால், பூண்டி ஏரி முழு கொள்ளளவை … Read more

வங்கக் கடலில் சம்பவம்.. உருவாகும் Montha புயல்.. வெளுக்குமா கனமழை?

Montha Cyclone : வங்கக் கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2025 அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டம்

கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த செப்.27-ல் நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்தனர். 110 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தவர்களின் … Read more

வாணியம்பாடி: இரவில் உலாவும் ஒற்றை காட்டு யானை, அச்சத்தில் மக்கள்

வாணியம்பாடி அருகே அண்ணா நகர் பகுதியில் மீண்டும் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம்.

“பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வது தற்கொலைக்கு சமம்” – டிடிவி தினகரன்

திருப்பத்தூர்: “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை தவெக விஜய் ஏற்றுகொள்வது தற்கொலைக்கு சமம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். விடுதலை போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்கள் நினைவுதினத்தில் இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு … Read more

மோந்தா புயலால் தமிழ்நாட்டில் கனமழை இருக்குமா? வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?

Montha Cyclone: மோந்தா புயலால் தமிழ்நாட்டிற்கு கனமழை இருக்குமா, புயல் எங்கே கரையை கடக்கும் உள்ளிட்ட கணிப்புகளை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். 

தி.மலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தோர் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திருவண்ணாமலையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு … Read more

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – எழுத படிக்க தெரிந்தால் போதும்!

Govt Jobs : எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்