மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் முக்கிய தகவல்

Tamil Nadu Weather Today:  கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் கூறியுள்ளார்.  

ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம்

சென்னை: ​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் புற்​று​நோய் சிகிச்​சைக்​கான அனைத்து மருத்​துவ சேவை​களை​யும் ஒருங்​கிணைந்து வழங்​கு​வதற்​கான சிறப்பு மையம் நேற்று திறக்​கப்​பட்​டது. நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம் தலை​மை​யில், சென்னை புற்​று​நோய் மையத்​தின் துணை செயல் தலை​வரும், புற்​று​நோய் அறுவை சிகிச்சை நிபுணரு​மான மருத்​து​வர் எப்​.ஹேமந்த் ராஜ் இந்த மையத்​தைத் திறந்து வைத்​தார். மருத்​து​வர் ஹேமந்த் ராஜ் பேசும்​போது, “மருத்​து​வர்​கள் புற்​று​நோய்க்கு சிகிச்சை அளிப்​பதுடன், நோயாளி​களு​டன் நேரம் செல​விட்​டு, அவர்​களின் கவலைகளைக் கேட்​டு, … Read more

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!

Coimbatore College Girl Gang Rape: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 3 கேள்விகளை தவெக தலைவர் விஜய் கேட்டுள்ளார்.   

எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணிக்​கு, அரசி​யல் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்துக்​கான பணி​கள் (எஸ்​ஐஆர்) இன்று முதல் தமிழகம் முழு​வதும் தொடங்​கு​கின்றன. இதை முன்​னிட்​டு, சென்னை மாவட்ட தேர்​தல் அலு​வல​கம் சார்​பில், அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம், ரிப்​பன் மாளி​கை​யில், மாவட்ட தேர்​தல் அலு​வலர் ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் … Read more

பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இச்சம்பவத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் … Read more

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் 

நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாகை மாவட்​டம் அக்​கரைப்​பேட்​டை, நம்​பி​யார் நகர் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து 3 விசைப்​படகு​களில் 31 மீனவர்​கள் அக்​.31-ம் தேதி கடலுக்கு மீன்​பிடிக்க சென்​றனர். நேற்று முன்​தினம் இரவு இந்​திய எல்லை பகு​தி​யில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் மீனவர்​களை … Read more

பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: நவ.6-ல் நடக்கிறது 

சென்னை: தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்பது குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் பங்கேற்​கு​மாறு அரசி​யல் கட்​சிகளுக்கு தலை​மைச் செயலர் அழைப்பு விடுத்​துள்​ளார். கரூரில் கடந்த செப்​.27-ம் தேதிதவெக தலை​வர் விஜய் பங்கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, … Read more

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து

சென்னை: ‘​வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி​களை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​தி​னால் பயனில்​லை’ என மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறியது: திமுக மீது எப்​போதெல்​லாம் ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் வரு​கிறதோ, அப்​போதெல்​லாம் அதை திசை திருப்​புவதற்​காக பல்​வேறு விஷ​யங்களைக் கையில் எடுப்​பது வாடிக்​கை​யாக இருக்​கிறது. அப்​படித்​தான் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத் திட்​டத்தை கையில் எடுத்​துள்​ளனர். அந்​தக்கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, 75 லட்​சம் போலி … Read more

திமுகவில் மட்டுமல்ல.. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது – செங்கோட்டையன் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

KA Sengottaiyan About ADMK Family Politics: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் குடும்ப அரசியல் உள்ளது என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். 

“வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை நீக்கியிருக்க வேண்டும்” – ஹெச்.ராஜா

மதுரை: வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த இயக்கம் செய்த பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியில் பொது மக்களுக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”கடந்த 35 ஆண்டு காலமாக மாவட்ட தலைவர் தொடங்கி முக்கிய தலைமை பொறுப்புகளை முழு சுதந்திரத்துடன் … Read more