மதுரை: பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “சிறுநீரக திருட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார். மனுதாரர் தரப்பில், “சிறுநீரக திருட்டு வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் வழங்க வேண்டும்” … Read more