நாளை நடப்பது யாருக்கும் தெரியாது – சரத்குமார் தத்துவம்

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்பது வாக்காளர்களை சரிபார்க்கும் வேலை. கள்ள ஓட்டுவது போடுவது தடுக்கப்படும் என்பதால் குறை கூறுகின்றனர். எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்காளரை சரிபார்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவதாக கூறியுள்ளனர். உண்மையான வாக்காளராக இருந்தால், அந்த வீட்டுக்கு வரும்போது தகுந்த ஆவணங்களை காண்பித்து சீர்திருத்தம் செய்வதுதானே நல்லது. தேர்தலுக்கு முன்புதானே வாக்காளர் … Read more

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிராம்பட்டினம் முஸ்லிம்கள் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: தஞ்​சாவூர் மாவட்​டம் அதி​ராம்​பட்​டினத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட முஸ்​லிம்​கள் மீது போலீ​ஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்​து, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது. அதி​ராம்​பட்​டினத்​தைச் சேர்ந்த சாஜி​தா, பாத்​தி​மா, இப்​ராஹீம் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: முஸ்​லிம் தலை​வர்​கள், இயக்​கத்​தினர் ஆகியோர் மீதான மத்​திய அரசின் கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​து, அதி​ராம்​பட்​டினம் பேருந்து நிலை​யம் அருகே அமை​தி​யான முறை​யில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டத்​தில் … Read more

கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது: தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு 

சென்னை: தமிழக ஆம்னி பேருந்​துகளுக்கு கேரளா போக்​கு​வரத்து துறை ரூ.70 லட்​சம் அபராதம் விதித்த நிலை​யில், கேரளா​வுக்கு பேருந்​துகளை இயக்க மாட்​டோம் என ஆம்னி பேருந்து உரிமை​யாளர் சங்​கம் அறி​வித்​துள்​ளது. தமிழகத்​தைச் சேர்ந்த ஆம்னி பேருந்​துகள் முறை​யாக வரி செலுத்​த​வில்லை என்​றும் ஒரு​முறை கேரளா​வுக்கு செல்​வதற்​கான தற்​காலிக அனு​ம​தி​யைப் பெற்று பேருந்​துகள் இயக்​கப்​பட்​ட​தாகக் கூறி கொச்​சி​யில், 30 ஆம்னி பேருந்​துகளுக்கு தலா ரூ.2 லட்​சம் முதல் 2.5 லட்​சம் வரை மொத்​தம் ரூ.70 லட்​சம் வரை நேற்று … Read more

ரவுடி நாகேந்திரன் உயிரோடுதான் இருக்கிறார்; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்: பகுஜன் சமாஜ் தலைவர் ஆனந்தன் தகவல் 

சென்னை: ‘ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக கைதாகி சிகிச்​சை​யில் இருந்த ரவுடி நாகேந்​திரன் இன்​னும் இறக்​க​வில்​லை. ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அவருக்கு பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்து போலீ​ஸார் தப்​பிக்க வைத்​து​விட்​டனர்’ என்று பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ரான வழக்​கறிஞர் ஆனந்​தன் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் தெரிவித்​துள்​ளார். பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்த 2024 ஜூலை​யில் சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டின் அருகே ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை … Read more

59-வது பிறந்தநாளை முன்னிட்டு சீமான் வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ​​நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானின் பிறந்​த​நாளையொட்​டி, சென்​னை​யில் உள்ள அவரது வீட்​டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்​கப்​பட்​டது. நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தனது 59-வது பிறந்​த​நாளை நேற்று கொண்​டாடி​னார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரி​விப்​ப​தற்​காக காலை முதலே சென்னை நீலாங்​கரை​யில் உள்ள அவரது வீட்​டில் ஏராள​மான தொண்​டர்​களும், கட்சி நிர்​வாகி​களும் குவிந்​தனர். சீமானுக்கு வாழ்த்​துக் கூற வருகை தந்த தொண்​டர்​களுக்​காக அவரது வீட்​டில் தடபுடலான கறி … Read more

புதுச்சேரியில் எஸ்ஐஆர் நடைமுறைகளில் குளறுபடி: அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது என்று புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தெரு நாய்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தரமற்ற மருந்து கொள்முதல் செய்தது மற்றும் மதுபான உற்பத்தியில் லஞ்சம் பெற்றது தொடர்பாக … Read more

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் தொடர்ந்து செய்யப்படும் என தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த … Read more

சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்!

சென்னை: சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகரில் பெண்கள், குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ சேவை அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி … Read more

வெளுக்கப்போகுது கனமழை.. தென்மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கனமழை பெய்யுமா என்பது குறித்து பார்ப்போம்.   

“திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் ‘எஸ்ஐஆர்’ தவறு என சொல்லக் கூடாது” – சரத்குமார்

மதுரை: “திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் எஸ்ஐஆர் சரிபார்ப்பது தவறு என சொல்லக் கூடாது” என பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் கூறியது: “கோவையில் நடந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் காலில் சுட்டுப்பிடித்ததாக கூறியுள்ளனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களை நீதிமன்றங்களில் நிரூபித்து தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் … Read more