நெல்லைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

TN weather update: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 18) கனமழை பெய்யும் என்றும் திருநெல்வேலியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டி பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சபரிமலை சீசன் நவம்பர் 17, 2025 முதல் ஜனவரி 20, 2026 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கக் கோரிய வழக்கை தள்ளிவைத்த ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் டிச.16-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், ‘பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை சுத்தமாக பராமரித்து பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி … Read more

திருவள்ளூர் ரயில் சேவை ரத்து: வரும் 23ம் தேதி எந்தெந்த ரயில்கள் ஓடாது? -முழு விவரம்

Chennai Thiruvallur Train Service: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23 ஆம் தேதி திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

இந்து மதம் மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனு நிராகரிப்புக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் மனைவியின் விவாகரத்து மனுவை நிராகரித்த குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் திருமணம் செய்துகொண்டு சில மாதங்களுக்கு பிறகு பரஸ்பர விவாகரத்து கோரி அம்பத்துார் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது,கணவன் இந்து என்றும், … Read more

மாதம் ரூ.4,000 உதவித்தொகை! டிகிரி முடித்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அரசு – உடனே முந்திக்கோங்க

Tamil Nadu Government: யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதுடன், மாணவர்களுக்கு ரூ.4,000 உதவித் தொகையும் தமிழக அரசு வழங்குகிறது. இதுகுறித்து இங்கு முழுமையாக பார்ப்போம்.  

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று (நவ.17) மழை பெய்துள்ளது. குறிப்பாக, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் … Read more

திருப்பத்தூர் ஆட்சியர் தலைமையில் "போதைப்பொருள் வேண்டாம்" விழிப்புணர்வு

நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.  

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்கும் பழனிசாமி – அரசியல் முக்கியத்துவம் என்ன?

கோவை: கோவைக்கு நாளை (நவ.19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நாளை (நவ.19) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் … Read more