SIR: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் போது… விஜய் போட்ட திடீர் குண்டு!

TVK Vijay: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் விமர்சித்துள்ளார்.

கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை கண்ணகி நகரில் உருவாகி வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் அமைத்து தரவேண்டும் என கார்த்திகா கோரிக்கை விடுத்திருந்தார். அதை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் … Read more

கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் 7-வது மாநில மாநாடு மதுரை​யில் வரும் ஜன. 7-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்த மாநாடு குறித்து விளக்​கு​வதற்​காக​வும், கிராம மக்​களின் பிரச்​னை​களைத் தெரிந்​து​கொள்​ள​வும் கடந்த 4 மாதங்​களாக, தமி​ழ​கத்​தில் கிரா​மங்​கள்​தோறும் சென்​றேன். கடந்த மாதத்​தில் திருநெல்​வேலி, திண்​டுக்​கல் ஆகிய மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் … Read more

தமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றுகிறார்கள்… யாரை குறிவைக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்?

Judge Anand Venkatesh: தமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் என வேலூரில் பள்ளி விழா ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசி உள்ளார். 

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று பாய்கிறது: 25 மணி நேர கவுன்ட்-டவுன் தொடக்கம்

சென்னை: எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அதற்கு மாற்றாக, எல்விஎம்3 -எம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்- 7ஆர்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று … Read more

மோடி ஆட்சிக்கு வந்த  10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் 

சென்னை: மோடி ஆட்சி பொறுப்​புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளதாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி பெரு​மிதத்​துடன் கூறி​னார். இந்​தி​யா​வில் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் உரு​வான தின விழா ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆளுநர் பேசி​ய​தாவது: தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்​கள் உரு​வான நிகழ்வை கொண்​டாடு​கிறோம். நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு ஒரே பாரத​மாக இல்​லை. 560 சமஸ்​தானங்​களாக பிரிந்து கிடந்​தன. அவற்றை எல்​லாம் … Read more

ரூ.19 கோடியில் 87 புதிய ஆம்புலன்ஸ்கள்: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு சார்​பில் ரூ.19 கோடி​யில் 87 புதிய ‘108’ ஆம்​புலன்​ஸ்​களை முதல்​வர் ஸ்டா​லின் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். வீட்​டு​வசதி துறை​யில் டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு பணி நியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ‘108 அவசர​கால ஆம்​புலன்​ஸ்’ சேவையை கடந்த 2008 செப்​.15-ம் தேதி அப்​போதைய முதல்​வர் கருணாநிதி தொடங்கி வைத்​தார். EMRI GHS என்ற தனி​யார்நிறு​வனத்​துடன் ஏற்​படுத்​தப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் அடிப்​படை​யில் 108 ஆம்​புலன்ஸ் சேவை வழங்​கப்​பட்டு … Read more

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் – முதல்வர், கட்சித் தலைவர்கள் உறுதியேற்பு 

சென்னை: மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், தமிழகத்​தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறு​தியேற்​றனர். மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகி​கள் நாளாக​வும், தமிழ்​நாடு நாளாக​வும் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இதையொட்டி முதல்​வர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து செய்தி வெளி​யிட்​டுள்​ளனர். ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: ஆழ்ந்த ஆன்​மிகம், கலாச்​சா​ரம் மற்​றும் இலக்​கிய பாரம்​பரியத்தை கொண்ட தமிழகம் உரு​வான தினத்​தில் தமிழக … Read more

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம்

சென்னை: ​சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்​து​வது என பாமக​வின் ஒருங்​கிணைந்த செயற்​குழு கூட்​டங்​களில் தீர்​மானிக்கப்​பட்​டது. பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இதனால் கட்​சி​யில் நிர்​வாகி​களும், தொண்​டர்​களும் இரு பிரிவு​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்​புமணிக்கு எதி​ராக, தனது மகள் காந்​தியை கட்​சி​யின் … Read more

மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்! யார் யாருக்கு கிடைக்கும்?

அதிமுக ஆட்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.