புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில தலைவர் அன்பழகன் தலைமையில், இன்று அக்கட்சியினர் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்துறை தலைமை அலுவலகம் முன்பு வந்தனர். அங்கு மின்கட்டண உயர்வை கண்டித்தும், அரசு அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் … Read more

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் கட்சி ஒழுங்குமுறையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் வரும் ஃபோர்டு நிறுவனம் மூலம் 600 பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி ஆலை சென்னையில் அமையவுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம். ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. … Read more

கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி.. 50 நாள் கழித்து வெளியான மர்மம்! நடந்தது என்ன?

புதுக்கோட்டை திருமயம் அருகே பழனிவேலு என்ற நபர் 50 நாட்களுக்கு முன் மாயமான வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில் உயர்நீதிமன்றம் அக். 3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக். 5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி … Read more

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. எப்போது கிடைக்கும்? முழு விவரம்!

Tamil Nadu Government Free Laptops: தமிழக அரசு சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக புது அப்டேட் வெளியாகி உள்ளது. 

‘தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல்’ – மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா … Read more

சென்னையில் நாய், பூனை வளர்க்கிறீர்களா? வெளியான அதிர்ச்சி உத்தரவு!

சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெறவில்லை என்றால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறியது உண்மை – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: “உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற முயற்சிக்கிறார்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. முன்கூட்டியே வீடு தேடி வரும் பொருட்கள்!

Latest News On Ration Card: தாயுமானவர் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறளாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் 2025 நவம்பர் 3,4ஆம் தேதிகளில் வீடுகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.