அதிக எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: கடற்​படை பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் திட்​ட​மிட்ட சுற்​றுப்​பாதை​யில் வெற்றிகர​மாக விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் தனது வரலாற்​றில் புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு அதி​கபட்ச எடை கொண்ட செயற்​கைக்​கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்​துள்​ளது. அதிகஎடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை பிற நாடு​களின் உதவி கொண்டு விண்​னுக்கு அனுப்ப வேண்​டிய நிலையில் இஸ்ரோ இருந்​தது. அதனால் செல​வீனம் அதிகரிப் பதுடன், நேர விரயமும் ஏற்பட்​டது. இதையடுத்து அனைத்து ராக்​கெட்​களின் உந்து​விசைகளை அதி​கரிக்​கும் பணி​களை இஸ்ரோ முன்​னெடுத்​தது. அதன்​பல​னாக … Read more

அனைத்துக் கட்சி கூட்டம் திசை திருப்பும் நாடகம்:  நயினார் நாகேந்திரன் விமர்சனம் 

சென்னை: அனைத்​துக் கட்சி கூட்​டம் மக்​களை திசை திருப்​பும் நாடகம் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மக்​கள் குறை​களைத் தீர்க்க ஒரு​போதும் அனைத்​துக் கட்சிக் ​கூட்​டத்தைக் கூட்​டாத முதல்​வர் ஸ்​டா​லின், தற்​போது மட்​டும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் பற்​றிய கூட்​டத்தை நடத்​து​வ​தில் இருந்தே தெரி​கிறது இது மக்​களை மடை​மாற்ற நடத்​தப்​படும் மற்​றுமொரு திசை​திருப்பு நாடகம் என்​று. பல்​லாண்​டு​காலமாகத் தொடர்ந்து நடை​பெறும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், மதி​முக, விசிக, மக்​கள் நீதி மய்​யம், தேமு​திக, திரா​விடர் … Read more

வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.” என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று (நவ.2-ம் தேதி) கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) திணிக்கப்படுகிறது. இதனை இண்டியா கூட்டணி எதிர்க்கிறது. எஸ்ஐஆர் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. … Read more

‘வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது’ – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை.” என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாமக, நாதக, தவெக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் … Read more

‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ

மதுரை: “எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதல்வர் பெருமையாகக் கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை முறையாக செய்திருக்க வேண்டும். எங்கள் பொதுச்செயலாளர் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகள் பிரச்சினை என்வென்று … Read more

பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம்

மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: “பிரதமர் மோடி தேர்தலை காரணமாக வைத்து மீண்டும் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கிறோம். அவர்கள் இன்றி இங்கு பல வேலை நடக்காது என, நமக்கு நன்றாகத் தெரியும். … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! சிறப்பு ரயில்கள் இயக்கம் – வெளியான அறிவிப்பு!

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ.3) … Read more

கோவை எஸ்.என்.ஆர் அரங்கில் சி.ஐ.டி.யு மாநில மாநாடு: நவ. 6 முதல் 9 வரை

CITU வின் 16 வது மாநில மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள எஸ் என் ஆர் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.