கரூர் வழக்கில் நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாமீன் மனு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் … Read more

50க்கும் மேற்பட்ட மயில்கள் பலி, விவசாயி கைது: வனத்துறையினர் விசாரணை

திருவேங்கடம் அருகே பறவைகளை கட்டுப்படுத்த எலி மருந்து வைத்த நிலையில் அதை தேசிய பறவையான மயில்கள் உட்கொண்டதால் 50க்கும் மேற்பட்ட மயில்கள் பலி. விவசாயி ஜான்சன் கைது. வனத்துறையினர் விசாரணை.

நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுக்கள் நாமக்கல், கோவைக்கு திடீர் பயணம்!

திருச்சி: மத்திய உணவத்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுக்கள் நாமக்கல், கோவைக்கு திடீர் பயணம் மேற்கொண்டன. மத்திய உணவுத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த திடீர் உத்தரவால் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த மத்தியக் குழுவினர் நாமக்கல், கோயம்புத்தூர் பகுதியில் இயங்கி வரும் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர். இதனால் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களின் ஆய்வுப் … Read more

முன்கூட்டியே வரும் பொதுத்தேர்வுகள்? சட்டமன்ற தேர்தலை ஒட்டி முடிவு?

Anbil Mahesh Important Announcement: சட்டமன்ற தேர்தலால் பொதுத்தேர்வில் மாற்றமா? 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை நவம்பர் 4-ல் வெளியீடு! – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு.

நெல் கொள்முதல் குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்: நயினார் நாகேந்திரன் 

தஞ்சாவூா்: தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார். தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். அப்போது விவசாயிகள் பல நாட்களாக நெல்லைக் கொட்டி வைத்து விற்பனை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். போதிய … Read more

விஜய் ரூ.200 கோடி சம்பளத்தை விட்டு வருகிறார்… ஏதோ ஆதாயம் இருக்கு – அமைச்சர் சந்தேகம்

Tamil Nadu News: ரூ.100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் தற்போது அரசியலுக்கு வருகிறார் என்றால், ஏதோ ஆதாயத்துடன் தான் வருகிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். … Read more

தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி – விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மற்றும் ஆயுர்வேத அழகு மற்றும் மூலிகைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.  

மேட்டூர் சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயம்

மேட்டூர்: மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்ததில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேட்டூர் அருகே கருமலை கூடல் சிட்கோ தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட ரசாயணம், பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்பேட்டையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (30) என்பவர் மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே, தொழிற்சாலையில் மெக்னீசியம் … Read more

தாம்பரம் – செங்கல்பட்டு: வருகிறது புதிய ரயில் பாதை – இதனால் யார் யாருக்கு நல்லது?

Tambaram – Chengalpattu 4th Line: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான 4வது ரயில் வழிப்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தத் திட்டத்தால் பயனடையப்போவது யார், கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.