“சத்தியம் வாங்கி ஓட்டு கேட்கிறது திமுக” – சீமான் கடும் விமர்சனம்

சிவகங்கை: “திமுகவினர் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்காமல், சத்தியம் வாங்கி ஓட்டு கேட்கின்றனர்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் சீமான் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக வெற்றி பெறும் என்று எப்படி கூற முடியும் ? அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்தப் … Read more

ஓசூர் ஸ்ரீ விஜய விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்; எம்எல்ஏ, மேயர் வழிபாடு

ஒசூர் ஸ்ரீ விஜய விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம். ஏராளமான பொதுமக்கள் மற்றும் எம் எல் ஏ, மேயர் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

“தமிழகத்திலும் எஸ்ஐஆர்… வாக்குத் திருட்டை முறியடிப்போம்!” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ‘தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர்: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!’ என்று தலைப்பிட்டு அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம் : ஆட்டத்தை தொடங்கிய திமுக.. வெளியான முக்கிய அறிவிப்பு

DMK : தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SIR விவகாரம்: திமுகவுடன் இணைந்து அதிமுகவும் எதிர்க்க திருமாவளவன் வலியுறுத்தல்

அரியலும்: “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், குழு தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து, செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: “தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழ்நாட்டிலும் … Read more

திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் – அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

Tamil Nadu government : திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் வைப்பதற்கான கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.   

“திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் பேசுகின்றனர்” – ஓபிஎஸ்

சிவகங்கை: “அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். மேலும் அவர், மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியது: “விஜய் கரூரில் உயிரிழந்தோரின் உறவினர்களை வரவழைத்து ஆறுதல் … Read more

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம்: கூட்டேரிப்பட்டு அடுத்த ஆலகிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வைஷ்ணவி தேவி- ஆலகிராமம், செக்கடி தெரு சந்திப்பில் பாதியளவு மண்ணில் புதைந்தும் புதர்கள் அடர்ந்துள்ள பகுதியில் வைஷ்ணவி தேவி சிற்பம் காணப்பட்டது. நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். தேவியின் முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையிலும், … Read more

தமிழ் தெரிந்தால் போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் அறநிலையத்துறையில் வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

TN HRCE Recruitment 2025: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.