மற்றோரு வாலிபருடன் பேசிய ஆத்திரத்தில் கள்ளகாதலியை வெட்டிய நபர்.. !

கள்ளகாதலியை கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சோனாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்வதி . இவர் தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை இவரின் அண்ணன் முறை உறவான முருகன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகிவந்துள்ளனர். இந்நிலையில், பார்வதி முருகனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், வேறொரு வாலிபனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.இதனை அறிந்த முருகன் பார்வதியை கண்டித்துள்ளார்.

ஆனால், பார்வதி அந்த இளைஞரின் பழக்கத்தை கைவிடவில்லை. இதனால், ஆத்திரமரைந்த சம்பவதன்று அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு பார்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். 

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அக்கம்வ்பக்கதினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.