வாரத்தில் 5 நாட்கள் வேலை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற அறிவிப்புக்கான அரசாணையை, மாநில அரசு பிறப்பித்துள்ளது.

சத்தீஸ்கர்
மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 73வது குடியரசு தினமான கடந்த மாதம் 26 ஆம் தேதி,
சத்தீஸ்கர்
மாநில அரசின் கொள்கை முடிவுகளை, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார்.

அதன்படி, அரசு ஊழியர்களின் செயல் திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில், மாநில அரசு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற திட்டத்தை செயல்படுத்தும் என்றும், ஓய்வூதிய திட்டத்தில், மாநில அரசின் பங்களிப்பு, 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற அறிவிப்புக்கான அரசாணையை, சத்தீஸ்கர் மாநில அரசு பிறப்பித்து உள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்பால்,
அரசு ஊழியர்கள்
மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.