காஷ்மீரில் அல்கொய்தா இயக்க பயங்கரவாதி கைது

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய எ.ஜி.எச். என்ற இயக்கத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தவ்கீத் அகமது ஷா என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுபற்றி கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தவிர லக்னோ நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் அல்கொய்தா இயக்க பயங்கரவாதி தவ்கீத் அகமது ஷாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) இன்று கைது செய்தனர்.

லக்னோவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்துவதற்கு அல்கொய்தா இயக்கத்தின் திட்டமிடலுக்கு முக்கிய மூளையாக அகமது இருந்தது தெரிய வந்துள்ளது என்று என்.ஐ.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.