காரைக்குடி: வன அதிகாரிகள் அதிரடி சோதனை – யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

காரைக்குடியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை தந்தத்திலான பொருட்களை பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 20-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப் பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. இக்கடைகளில் யானை தந்தத்தால் ஆன பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை வன நுண்ணறிவு மற்றும் புலனாய்வு உதவி வன பாதுகாவலருக்கு புகார் வந்துள்ளது.
image
இந்த புகாரின் அடிப்படையில் இன்று காரைக்குடி பகுதி உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் துணையோடு பழங்கால கலை பொருட்கள் கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட எழுத்தாணி, விளையாட்டு பொம்மைகள், தாய கட்டைகள், குங்குமச்சிமிழ், மற்றும் மான் கொம்பு, புலி பல் உள்ளிட்ட பல பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
image
இதையடுத்து அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கருதப்படும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சிவகங்கையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணைக்காக கலைப் பொருள் வியாபாரியை அழைத்துச் சென்றுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.