1987 போன்று பலாலியில் தரையிறங்கும் மோடி! தென்னிலங்கைக்கு கடுமையான செய்தி (Video)



இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியா சாத்தியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதம் உரிய தரப்பினர்களுக்கு சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது. எனினும், காழ்ப்புணர்ச்சி கரணமாக இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்தியா எங்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது. இந்நிலையில், நாங்கள் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையினை முன்வைத்துள்ளோம். அரசியல் ரீதியான கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்” என அவர் குற்றிபட்டுள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.