Dhanush:தனுஷின் அடுத்த திட்டம் என்ன?: வெளியான 'ஹேப்பி நியூஸ்'

காதல் மனைவியான
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தை பிரிந்த பிறகு தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கிறார்
தனுஷ்
. தற்போது அவர் தன் அண்ணனும், குருவுமான செல்வராகவன் இயக்கத்தில்
நானே வருவேன்
படத்தில் நடித்து வருகிறார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. இன்றுடன் அந்த பட வேலையை முடித்துக் கொண்டு நேராக ஹைதராபாத்துக்கு கிளம்புகிறாராம் தனுஷ்.

முன்னதாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வந்தார். அங்கு பிரேக் கிடைத்தவுடன் தமிழ்நாட்டிற்கு வந்து நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இங்கு வேலை முடிந்ததும் வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத்துக்கு செல்கிறார். தனுஷுக்கு செட்டில் இருப்பது தான் சந்தோஷம். அதனால் அவரின் ஷெட்யூல் பற்றிய தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு நிச்சயம் ஹேப்பி நியூஸ் தான்.

முன்னதாக பிரிவு குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு வாத்தி படப்பிடிப்பில் தான் தனுஷ் கலந்து கொண்டார்.

வேலையில் தெளிவாக இருந்தாலும், செட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக, சோகமாக இருந்தாராம் தனுஷ். ஐஸ்வர்யாவை பிரிந்த கவலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட படக்குழுவினர் அவரை தொந்தரவு செய்யவில்லை.

வாவ், தனுஷுக்கும், தாராவுக்கும் இடையே ஒர்க்அவுட் ஆன ‘கெமிஸ்ட்ரி’
இதற்கிடையே ஐஸ்வர்யாவோ, முசாபிர் என்கிற காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார். தென்னிந்திய திரையுலகை சேர்ந்த சூப்பர் ஸ்டாரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதல் கதை தான் அந்த முசாபிர்.

முசாபிர் வீடியோவை இயக்கியதுடன், தயாரிக்கவும் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.