நடிகர் ரவி கிஷன் மீது காங்., பெண் நிர்வாகி ஆபாச புகார்

நொய்டா: உத்தரபிரதேச காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பங்குரி பதக், பாஜ எம்பியும் நடிகருமான ரவி கிஷன் மீது ஆன்லைனில் துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.பாலிவுட் நடிகரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பியுமான ரவி கிஷன், இந்தி மற்றும் போஜ்புரி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவர் மீது காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான பங்குரி பதக் நொய்டா போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ‘நொய்டாவில் நடந்த வாக்குப் பதிவுக்கு அடுத்த நாள், எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான டிவிட்டர் கணக்குகளில் இருந்து ஆபாசமான கருத்துகள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. எனக்கு எதிராக ஆன்லைனில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அதிகரித்ததால், அந்த கணக்குகளை நீக்கினேன்.அவற்றில், பாஜ எம்பி ரவி கிஷன் பெயரில் உள்ள கணக்கில் இருந்தும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் வெளியானது.மேலும், இந்த பதிவை நீக்க வேண்டுமானால் ₹ 1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மற்றொரு பதிவில் கோரப்பட்டது.பாஜ ‘ஐடி செல்’ நடத்தும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். எனவே, எனக்கு எதிராக பரப்பப்படும் ஆபாச பதிவுகளை நீக்க வேண்டும்.சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் பாது காப்பு) விருந்தா சுக்லா கூறுகையில், ‘பங்குரி பதக் தரப்பு புகார் குறித்து சைபர் செல் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.