வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு <!– வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு –>

திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போளூரிலுள்ள ஆக்சிலியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் ஜெனிபர் என்பவர் பத்தாம் வகுப்புகான கணிதத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே செல்போன் மூலம் படம் பிடித்து கணித ஆசிரியர் பிரசாந்திற்கு கொடுத்த நிலையில், அதனை ஆசிரியர் பிரசாந்த் மாணவர்களுக்கு பகிர்ந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் 2 நாட்களாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போளூர் கல்வி மாவட்ட அலுவலர் அளித்த புகாரில், பள்ளியின் தாளாளர் நிர்மல்ரோஸ், முதல்வர் கிரேசி பாத்திமா, கணித ஆசிரியர் பிரசாந்த், அலுவலகப் பணியாளர் ஜெனிஃபர் ஆகிய 4 பேர் மீது போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.