இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 25,920: கோவாவில் 100% மக்களுக்கு இருதவணை தடுப்பூசி செலுத்தி சாதனை

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றின் காரணமாக 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே நாட்டிலேயே முதல் மாநிலமாக கோவா மாநிலத்தில் 100% மக்களுக்கும் இரு தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 2.07 % என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 2.76%. .
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,27,80,235.
* கடந்த 24 மணி நேரத்தில் 66,254 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,19,77,238.
* கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,10,905.
* இதுவரை நாடு முழுவதும் 174.6 (1,74,64,99,461) கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கோவாவில் 100% தடுப்பூசி செலுத்தி சாதனை: கோவா மாநிலத்தில் தகுதி உள்ள 11.66 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக அம்மாநில சுகாதார சேவைகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
100% தடுப்பூசி இலக்கை அடைந்துவிட்டதால், மாநில சுகாதார சேவைகள் இயக்குநரகம் அதன் அனைத்து தடுப்பூசி மையங்களையும் மூடிவிட்டு, அவற்றை சாதாரண நோய்த்தடுப்பு திட்டத்தில் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.