கேரளாவைப் போல கர்நாடகாவிலும் நந்திமலையில் சிக்கிய இளைஞர்: பத்திரமாக மீட்ட விமானப்படை

கேரளாவில் மலை இடுக்கில் இருந்து இளைஞர் பாபு மீட்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், கர்நாடகாவின் சிக்கபல்லபூரில் உள்ள நந்திமலையில் சிக்கிய இளைஞரை ஹெலிகாப்டர் உதவியுடன் இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடகாவில் பொறியியல் படித்து வரும் டெல்லியைச் சேர்ந்த மாணவர் நிஷாங்க், நந்திமலைக்கு தனியாக மலையேற்றம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். எனினும் நல்வாய்ப்பாக மலை உச்சியில் இருந்து தட்டையான பகுதியில் விழுந்ததால் உயிர் பிழைத்தார்.
image
பின்னர் தான் சிக்கிக்கொண்டிருப்பது குறித்து அவரே சிக்கபல்லாபூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இளைஞர் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் சிக்கியிருந்ததால் விமானப்படை உதவி நாடப்பட்டது. இதனையடுத்து Mi17 ரக ஹெலிகாப்டரில் சென்ற விமானப்படை வீரர்கள், மலையில் சிக்கியிருந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.