காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி : ராகுல் காந்தி அறிவிப்பு

டில்லி பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி யின் பெயரை அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மொத்தம் 177 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராகக்  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.  இதை அவர் . லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் யார் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.  வெற்றி பெறும் கவுன்சிலர்கள் இணைந்து, மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்கின்றனர். இத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஜனவரி 28ந்தேதி துவங்கி 4ம் தேதி முடிவடைந்தது. மனுக்களை திரும்ப பெற இன்று மாலை 5:00 மணி வரை … Read more

பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொலை

சம்பா: ஐம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் எல்லையை தாண்டி போதைப் பொருட்களை கடத்த முயன்ற மூன்று பாகிஸ்தானிய கடத்தல்காரர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் இருந்து பயணித்து, சர்வதேச எல்லையைத் தாண்டி, பிளாஸ்டிக் பைப் மூலம், எல்லை வேலி வழியாக போதைப் பொருளைக் கடத்த முயன்றதாக எல்லைப் பாதுகாப்பு படையின் ஜம்மு எல்லைப்புற இன்ஸ்பெக்டர் ஜெனரல்  டி.கே.பூரா தெரிவித்துள்ளார்.   கடந்த 10 நாட்களாக போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் குறித்து எங்களுக்கு தகவல் வந்ததாகவும், அதன் … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு- வங்கதேச பிரதமர் இரங்கல்

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 92.  நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்ற லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  லதா மங்கேஷ்கரின் … Read more

துபாயில் இருந்து கேரளா திரும்பிய முதல்வர் பினராய்க்கு பாஜ கருப்புக்கொடி

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் சிகிச்சைக்காக 3 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவியும் சென்றார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பின்னர் கடந்த மாத இறுதியில் அவர் கேரளா திரும்புவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், திடீரென அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து நேராக அவர் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்நிலையில், நேற்று மதியம் அவர் துபாயில் … Read more

போலீசாரை கொல்ல நடிகர் திலீப் திட்டம்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி-போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கியுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு எதிராக, புதிதாக இரண்டு ‘ஆடியோ’க்களை, திரைப்பட இயக்குனர் பாலசந்திரகுமார் வெளியிட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் திலீப் மீது, ஏற்கனவே நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கு உள்ளது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொல்வதற்கு திட்டமிட்டதாக, திலீப் உள்ளிட்டோர் மீது குற்ற சதி வழக்கும் நிலுவையில் உள்ளது. … Read more

நடிகர் சித்தார்த்திடம் போலீசார் விசாரணை

'பாட்மின்டன்' வீராங்கனை பற்றி, சமூக வலைதளத்தில் நடிகர் சித்தார்த் தரக்குறைவாக கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, அவரிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர். 'பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த், 42. பஞ்சாபில் பிரதமர் மோடி பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். அதில், 'நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது' … Read more

மருமகள் கமீலாவுக்கு பதவி: பிரிட்டன் ராணி விருப்பம்| Dinamalar

லண்டன்,-”ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அடுத்த அரசராக சார்லஸ் பதவியேற்கும்போது, அவரது மனைவி கமீலா, ராணியாக இருக்க வேண்டும்,” என, ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.’ குயின் கன்சார்ட்’பிரிட்டன் ராணியாக பொறுப்பேற்று வரும் ஜூனில் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறார், 95 வயதாகும் ராணி எலிசபெத். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ராணி எலிசபெத் கூறியுள்ளதாவது:இத்தனை ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு, ஒத்துழைப்புக்கு நன்றி; இதற்கு நான் கடமைபட்டுள்ளேன்.எனக்குப் பின், என் மகன் … Read more

ஆந்திராவில் சாலை விபத்து: கார் மீது லாரி மோதியதில் 8 பேர் பலி

ஐதராபாத், ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக வந்த இன்னோவா கார் மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலுயே உயிரிழந்தனர்.  ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உருவகொண்டா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.