முடிவுக்கு வரும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

25 வருடங்களுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரவுசரான இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டோடு இந்தச் சேவையை நிறுத்த மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது. கணினிகளில் இணையப் பயன்பாடு ஆரம்பித்த காலத்தில் பயனர்களுக்கு இருந்த ஒரே பிரவுசர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமே. ஆனால், காலப்போக்கில் மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், சஃபாரி, க்ரோம் போன்ற பிரவுசர்களின் வேகத்தோடு எக்ஸ்ப்ளோரரால் போட்டி போட முடியவில்லை. அதன் பயன்பாடு மிக மிகக் குறைவான விகிதத்திலேயே இருந்து வந்தது. மேலும் மைக்ரோசாஃப்ட் … Read more

பஞ்சாப் தேர்தல் – காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் … Read more

'சிறந்த பாடகரை துணைக்கண்டம் இழந்து விட்டது!' – பிரதமர் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை, சிகிச்சை பலனின்றி பாடகி லதா மங்கேஷ்வர் உயிரிழந்தார். அவருக்கு வயது 92. மும்பையில் உள்ள சிவாஜி நகரில், பாடகி லதா மங்கேஷ்வரின் உடல் அரசு முழு மரியாதையுடன் தகனம் … Read more

மிஷ்கின் எடுக்கப்போகும் புதிய அவதாரம்..பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் இயக்கத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டவர் இயக்குனர் மிஷ்கின் . சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனரான மிஸ்கின் தொடர்ந்து அஞ்சாதே , யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன் போன்ற தனித்துவமான பல படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக பல படங்களில் இருக்கும் கமர்ஷியல் அம்சங்களை தவிர்த்து தன் படங்களில் ஒரு புது கோணத்தில் கதையை நகர்த்தும் முயற்சியில் ஈடுபடுவார் மிஷ்கின். அதில் பல தடவை வெற்றியும் அடைந்துள்ளார். மேலும் காமெடிக்கு … Read more

இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கான முக்கிய அறிவித்தல்! அதிகரிக்கப்படும் கட்டணம்

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கோவிட் காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது 7,500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5,000அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. நாட்டின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு பொலிஸ் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த மாதத்தில் மாத்திரம் 82, 327 வெளிநாட்டு சுற்றுலாப் … Read more

லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் <!– லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் –>

மும்பையில் காலமான பாடகி லதா மங்கேஸ்கரின் உடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சிவாஜி பார்க் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.  பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். தீவிரச் சிகிச்சை அளித்தும் பயனின்றி இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் … Read more

முப்படை வீரர்களின் மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்

மறைந்த பிரபல பாடகி ‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்தியாவின் இசைக்குயில், மெல்லிசையின் மகாராணி.., இப்படி பல பட்டங்களை தனக்கே உரித்தாக்கி கொண்டவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். தனது தேனிசைக் குரலால் 36 இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் மொத்தம் 25,000 பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை இந்தி மற்றும் மராத்தி பாடல்கள். தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல்,1955 முதல் … Read more

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் – அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15 ம் தேதி வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மத்திய அரசு அலுவலகங்கள் … Read more

நீட் எதிர்ப்பில் இருந்து பின் வாங்க மாட்டோம் – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெரும்பான்மை பலத்தால் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் முழுமையான வெற்றியைப் பெற்றால்தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.  கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இருப்பதால் உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் இப்போது இருக்கிறது. கோவை மாநகர் முழுதும் … Read more

ஆந்திராவில் சோகம் – கார் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலி

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக வந்த இன்னோவா கார் மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.