முப்படை வீரர்களின் மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்



மறைந்த பிரபல பாடகி ‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்தியாவின் இசைக்குயில், மெல்லிசையின் மகாராணி.., இப்படி பல பட்டங்களை தனக்கே உரித்தாக்கி கொண்டவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்.

தனது தேனிசைக் குரலால் 36 இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் மொத்தம் 25,000 பாடல்களை பாடியுள்ளார்.

அவற்றில் பெரும்பாலானவை இந்தி மற்றும் மராத்தி பாடல்கள். தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர்.

பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல்,1955 முதல் 1969-ஆம் ஆண்டு வரை சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 3 இந்தி படங்களையும் ஒரு மராத்தி படத்தையும் இயக்கியுள்ளார் லதா மங்கேஷ்கர்.

அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த அவர், அதன் காரணமாக உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், மறைந்த அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடன் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டிருந்த நிலையில், லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

மேலும், சச்சின், ஷாரூக் கான், அமிதாப் பச்சன், மகாராஷ்டிர முதல்வர், ஆளுநர், உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, முப்படை வீரர்களின் மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. பிறகு மும்பை சிவாஜி பூங்காவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.