உக்ரைன் – ரஷிய போரில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு

உக்ரைன்  ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. ரஷிய ராணுவம் கார்கீவ் நகரில் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மக்கள் போரில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.