உக்ரைன் போர்… மிக சக்தி வாய்ந்த வேக்யூம் குண்டு வீசிய ரஷியா..!

கீவ்,
ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்தன. 
இந்த நிலையில்,உக்ரைனின் ஒக்த்ரைகா நகர் மீது மிகவும் சக்தி வாய்ந்த வேக்யூம் குண்டினை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதுவர் கூறினார். மிக சக்திவாய்ந்த வேக்யூம் குண்டு காற்றில் உள்ள ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி வெடிக்கப்படுகிறது. குண்டு வீசும் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் வெடிபொருளுடன் கலந்து வெடிக்கும் போது, சாதாரண குண்டுகளை விட அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தை உண்டாக்கும். 
ஜெனீவா உடன்படிக்கைகளின்படி தடைசெய்யப்பட்ட வேக்யூம் குண்டுகளை உக்ரைன் மீது ரஷியா வீசியதாக அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் மார்க்ரோவே கூறினார். இந்த குண்டுவீச்சினால் ஏராளமான உக்ரைன் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.வேக்யூம் குண்டை பயன்படுத்துவது போர்க்குற்றம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.