தெலுங்கானாவில் வரும் 7 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் <!– தெலுங்கானாவில் வரும் 7 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் –>

தெலுங்கானா சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் இடையே பனிப்போர் வலுத்து வருகிறது. இதனால் மார்ச் 7 ஆம் தேதி ஆளுநர் உரையில்லாமலேயே சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதுமில்லை என்று அரசுத் தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டது.

ஆளுநர் உரை இடம் பெறாததற்கு தொழில்நுட்பக் காரணம் கூறப்பட்டாலும் அது என்ன என்று விரிவாக விளக்கம் அளிக்கப்படவில்லை. தற்போது புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன் ஹைதராபாத் திரும்பியதும் அரசின் முடிவு குறித்த தமது அதிருப்தியை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.