உக்ரைன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவிட வேண்டும் ; பிரதமர் நரேந்திர மோடி <!– உக்ரைன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவி… –>

உக்ரைன் விவகாரத்தில் அரசியல் செய்வதை ,எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றார்.

அவர்களின் பாதுகாப்பிலும், நலனிலும் எந்த சமரசமும் கிடையாது என்று அவர் தெரிவித்தார். நாடு சவாலான சூழலை எதிர்கொள்ளும் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக குறிப்பிட்ட பிரதமர், கண்மூடித்தனமான எதிர்ப்பு, எதிர்மறை கருத்துக்கள் தெரிவிப்பதையே அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக கூறினார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.