உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் ; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தமிழக சிறப்புக் குழு வலியுறுத்தல் <!– உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் ;… –>

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட எம்.பி. திருச்சி சிவா தலைமையிலான சிறப்பு கண்காணிப்புக் குழு, டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியது.

அப்போது, உக்ரைனிலுள்ள தமிழக மக்களை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து செய்து தருமாறு வலியுறுத்தியது. மேலும், உக்ரைனில் இருந்து வருகை தரும் மாணவர்களை உடனக்குடன் தனி விமானத்தில் அனுப்புவது உள்ளிட்டவை குறித்து அந்த சிறப்புக் குழு ஆலோசனை நடத்தியது.

இதுவரை உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்த 1,011 மாணவர்களில் 852 பேர் தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய மாணவர்கள் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் சிறப்பு குழுவினர் சந்தித்து தேவைகளை கேட்டறிந்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.