13 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இந்நிலையில், அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு 21-ம் தேதி இறுதிநாள் ஆகும்.
31-ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.