சென்னை: மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை எரிசக்திக் கழகம் மேற்கொண்டுள்ளது. உலகெங்கும் தற்போது மறுசுழற்சி மின் உற்பத்திக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவ்வகையில் காற்றாலை, சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டு முழுவதும் வெயில் அடிக்கும் என்பதால் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்வதில் அரசு ஆர்வம் காட்டி […]