மேகதாது திட்டத்தை தடுக்க சட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் – அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்றவாறு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரைத் தடுக்கும் முயற்சி என்றும், இது தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு அதன் நிதி நிலை அறிக்கையில், மேகதாது அணை திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.