வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறப்பு

சென்னை: ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் வரட்டுப்பள்ளம் அணையின்  புதிய  ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இன்று (9ம் தேதி) முதல் 17.6.2022 முடிய வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து 108.00 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.