அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால் ஏற்பட்ட வினை! – சந்திரிக்கா விடுத்துள்ள கோரிக்கை



அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு சீரழிந்துள்ளது விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டின் பொருளாதாரம் அதளபாலத்துக்குள் சென்று விட்து. இந்நிலையில், சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது.

இந்த அரசாங்கம் புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு சீரழிந்துள்ளது விட்டது.

இதை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் பேர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இன்று வீதிகளில் பொருட்களைக் வாங்க வரிசையாக நிற்கின்றனர்.

பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் இன்று திண்டாடுகின்றனர்.

எனவே, பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்கு முன் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.