சினிமா தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு : ஒப்பந்தம் கையெழுத்தானது

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதன் அடிப்படையில் நேற்று சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே புதிய ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுன்தினம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இந்த புதிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். தயாரிப்பாளர்கள் அனைவரும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சம்பள தொகையினை மட்டுமே படப்பிடிப்பின்போது அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.