எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.,| Dinamalar

ரியாத்:சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ட்ரோன் வாயிலாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ‘ஆலையின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை’ என சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சூடானில் செயல்படும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஏமனில் நடக்கும் உள்நாட்டு போரில், அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏமனில் சண்டையிடும் ஹவுதி பயங்கரவாத அமைப்பினர், சவுதி அரேபியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.