உக்ரைனில் இருந்து வந்த தமிழக மாணவர்களை விமான நிலையத்தில் வரவேற்ற முதலமைச்சர்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களைச் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

உக்ரைனில் இருந்து டெல்லிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர் டெல்லியிலிருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, அப்துல்லா, கலாநிதி வீராசாமி ஆகியோரும் வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று பூங்கொத்துக் கொடுத்து மாணவர்களை வரவேற்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.