தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணும் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் லாக்கரில் வைக்கப்பட்டது.

இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியையும் நியமித்தது.

நான் இருக்கேன்மா… முத்துமணி மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த
சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், பதிவான வாக்குகளை நான்கு வாரங்களில் எண்ண வேண்டும் என்றுமம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் வரும் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் சென்னை கல்லூரி சாலையில் உள்ள GOOD SHEPHERD CONVET பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என் நண்பனை பார்க்க முடியவில்லை… விஜயகாந்தின் போட்டோவை பார்த்து கதறி அழுத ராதாரவி!

தேர்தல் முடிவு அடுத்து வரும் நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவர்களது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.