நான் இருக்கேன்மா… முத்துமணி மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்துக்காக முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் மதுரையை சேர்ந்த
ரஜினிமுத்து
என்ற ஏபி முத்துமணி. ரஜினியின் தீவிர ரசிகரான ரஜினிமுத்து,
ரஜினிகாந்த்
வீட்டின் பூஜை அறையில் தான் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதனை அறிந்த ரஜினிகாந்த் அவரை போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மறைவு ரஜினியையும் அவரது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

என் நண்பனை பார்க்க முடியவில்லை… விஜயகாந்தின் போட்டோவை பார்த்து கதறி அழுத ராதாரவி!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்,
ரஜினி
முத்துவின் மனைவியை போனில் தொடர்பு துக்கம் விசாரித்துள்ளார். தனக்கு 5 நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் விசாரிக்க முடியவில்லை. அவருடைய மரணம் என்னை ரொம்பவே கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது என கூறி வருத்தப்பட்டுள்ளார்.

மாமியாரை எதிர்க்க துணிந்த தனுஷ்… முக்கிய பிரபலத்துக்கு பறந்த போன் கால்!

அப்போது தங்களுக்கு 10வது படிக்கும் மகள் உள்ளார் என்று கூறிய ரஜினி முத்துவின் மனைவி, அவரை பார்த்துக்கொள்ள ரஜினி முத்து இல்லாததை கூறி அழுதுள்ளார். அதனைக் கேட்ட ரஜினி, நான் இருக்கேம்மா… அவரை நன்றாக படிக்க வையுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் உடல்நிலை சரியானதும் வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.