ராஜ்யசபாவிற்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கீடு| Dinamalar

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் 14ம் தேதி துவங்குகிறது. அதில், ராஜ்யசபாவில் அவை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக 19 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் அமர்வில் ராஜ்யசபா காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்பட்ட நிலையில், இரண்டாவது அமர்வில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அமர்விற்கும் ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசின் சட்டங்களை நிறைவேற்றவும், பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கவும், 64 மணி நேரம் 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும் தனி நபர் தீர்மானங்களுக்கு 4 நாட்களும், கேள்வி நேரத்திற்கு ஒரு மணி நேரமும், ‛ஜீரோ ஹவருக்கு’ ஒதுக்கப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.