ஆழம் தெரியாமல் காலை விட்ட புடின்! திணறும் ரஷ்யா… கெத்து காட்டும் உக்ரைன்


உக்ரைன் – ரஷ்யா போர் தொடரும் நிலையில் தற்போது ரஷ்யாவின் ராணுவ படை மற்றும் பீரங்கிகள் முன்னேற முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தாக்குதலை தொடங்கிய நிலையில் 15 நாட்களாக தாக்குதல் தொடர்கிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

ஆழம் தெரியாமல் கால்களை விட்ட புடின்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போது, ஓரிரு நாட்களில் ரஷ்யாவிடம் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன.

ரஷ்யாவின் ராணுவம் மற்றும் விமானப்படை இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாதது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அதே சமயம் உக்ரைன் குறித்து ரஷியா தப்புக்கணக்கு போட்டுவிட்டதாகவும், ‘ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் புதின்’ என்றும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

திணறும் ரஷ்ய வீரர்கள்

நெப்போலியன், ஹிட்லர் ஆகியோருக்கு நேர்ந்த அதே கதிதான் புதினுக்கும் நேர்ந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்

இதற்கு காரணம் உக்ரைனை காக்கும் அரணாக தற்போது விளங்கி வரும் ‘ரஸ்புதிட்சா’ எனப்படும் பருவநிலை தான். ‘ரஸ்புதிட்சா’ என்பது உக்ரைன் மக்களையே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும் ஒருவகை வானிலை சீசன் ஆகும்.

இந்த காலத்தில் ஏற்படும் அதிக மழை மற்றும் பனி காரணமாக சாலை போக்குவரத்து மிகுந்த கடினமானதாக மாறிவிடுகிறது.

இதனால் தற்போது ரஷ்யாவின் ராணுவ படை மற்றும் பீரங்கிகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன.

சில இடங்களில் ராணுவ பீரங்கிகளை விடுத்து ரஷிய வீரர்கள் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவாலாகவும், மிகப்பெரிய சறுக்கலாகவும் பார்க்கப்படுகிறது.  

[ட்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.