ஏர் இந்தியா தலைவராக தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்| Dinamalar

புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின், புதிதாக தலைமை செயல் அதிகாரியை நியமிக்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. ‘துருக்கி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இல்கர் ஐசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பதவி ஏற்பதற்கு அரசியல் ரீதியாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். இதனால், புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஏர்இந்தியா
தலைவராக
சந்திரசேகரன்
நியமனம் | Tata | Air India | chandrasekaran

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2017 முதல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.